• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

நிதி வழங்கிய கே. டி. ஆர்க்கு நன்றி தெரிவித்த சகாரா கிரிக்கெட் அணியினர்..,

ByK Kaliraj

Feb 9, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் சகாரா கிரிக்கெட் அணியின் சார்பில் மூன்றாம் ஆண்டு நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்க வருமாறு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்கே.டி ராஜேந்திர பாலாஜிக்கு நேரில் அழைப்பு விடுத்தனர்.

அழைப்பிதழை பெற்றுக் கொண்டு அவசியம் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்க வருகை தருவதாக உறுதி அளித்தார்.

மேலும் கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெறுவதற்கு தேவையான நிதியை வழங்கி வீரர்களை உற்சாகப் படுத்தினார் நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜிக்கு சகாரா கிரிக்கெட் அணியினர் நன்றி தெரிவித்தனர்.