• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உயர் மின் கோபுரத்தை திறந்து வைத்த எஸ் ஆர் ராஜா..,

ByPrabhu Sekar

Nov 17, 2025

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மின்விளக்கு வசதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு உயர் மின் கோபுரத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.

இந்த உயர் மின் கோபுரம் நிறுவப்பட்டதன் மூலம், அந்தப் பகுதியில் இதுவரை காணப்பட்ட இருள்மிக்க தெருக்கள் இனி முழுமையாக ஒளிர இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.