வேலுார் மாநகராட்சி தேர்தலில், வேட்பு மனுவை வாபஸ் பெறும் வேட்பாளர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வேலுார் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன.
இதில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., என பல்வேறு கட்சிகளை சேர்ந்த 505 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், 33 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 472 பேர் களத்தில் உள்ளனர். எட்டாவது வார்டில், தி.மு.க., சார்பில் சுனில்குமார், அ.தி.மு.க., வில் சுரேஷ்குமார், பா.ஜ.க, ராஜா தியாகராஜன் என ஐந்து பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
சுனில்குமார் தவிற மற்ற நான்கு வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் தி.மு.க., வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வேட்புமனுக்கள் வாபஸ் பெற நாளை ( 7 ம் தேதி )கடைசி நாளாகும்.
மாலை 5:00 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளது. இது போன்ற நிலையை பயன்படுத்திக் கொண்டு, களத்தில் உள்ள பலம் மிக்க வேட்பாளர்கள், பணத்தை கொடுத்து மற்றவர்களை வாபஸ் பெற வைக்க மீடியேட்டர்கள் மூலம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பணத்துடன் வேட்பாளர்கள் அலைந்து கொண்டுள்ளனர்.இது குறித்து தேர்தல் ஆர்வலர்கள் கூறியதாவது: வேலுார் மாநகராட்சி தேர்தலில், ஒரு கவுன்சிலர் வேட்பாளர் தேர்தல் செலவு 1 கோடி ரூபாய் வரை ஆகும்.
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டால் இந்த பணம் மிச்சமாகும். தங்கள் வார்டில் யாராவது வேட்பாளர்கள் வாபஸ் வாங்கினால், அந்தந்த கட்சியின் பலத்தை பொருத்து 10 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கொடுக்கின்றனர். பலர் வந்த வரை லாபம் என்று பணத்தை வாங்கி கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]