வேலூர்மாவட்டம், தோட்டப்பாளையத்தில் காட்பாடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடையில் கடந்த 15 ஆம் தேதி சுவற்றில் துளையிட்டு தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் பாபு ஆகியோர் நேரில் அந்த இடத்தில் ஆய்வு செய்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் நகைக்கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராக்கள் கலர் சாயம் அடித்து நகைகளை திருடி சென்றதும் அவர் முழுமையாக சிங்கம் மாஸ்க் மற்றும் தலையில் விக் அணிந்து சென்றதால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே போல் அப்பகுதி முழுவதும் சாலையில் வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.


இருப்பினும் அப்பகுதியில் செல்போன் டவரில் எந்தெந்த செல்போன் சிக்கனலில் இருந்தது என ஆய்வு செய்து சுமார் ஒன்றரை மணிநேரம் மட்டுமே சிக்னல் ஓர் இடத்திலேயே இருந்த செல்போன் எண்ணை கண்டுபிடித்து தனிப்படை போலீசார் குச்சிப்பாளையம் கிராமத்தை இருசக்கர வாகன திருடன் டீக்காராமனை கைது செய்தனர். விசாரணையில், அவர் நகை கொள்ளையடித்ததை ஒப்புகொண்டார். அதனை தொடர்ந்து, ஒடுக்கத்தூர் பகுதியில் சுடுகாடு பகுதியில் பதுக்கி வைத்திருந்த தங்க வைர நகைகளை எடுத்துகொடுத்தார்.

அதன் மூலம் கொள்ளை அடிக்கப்பட்ட 16 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.8 கோடியாகும். இதனை விரைந்து கண்டுபிடித்த காவல்துறைக்கு பரிசுகள் வழங்கி பாராட்டபடவுள்ளனர். மேலும், இதில் யாருக்காவது தொடர்புள்ளதா? என விசாரிக்கப்படுகிறது. டீக்காராமன் வேறு எங்காவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என விசாரணையை போலீசார் துவங்கியுள்ளனர்.

கொள்ளை போன நகைகள் நூறு சதவிகிதம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக கொள்ளையன் 10 நாட்கள் திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வளவு நகைகளை கொள்ளையடித்த அவர் ஒரு தங்க ருத்திராட்சத்தை மட்டும் கழுத்தில் அணிந்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]