காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட ஓரிக்கை பகுதியிலே இயங்கும் தனியார் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக வருகை தந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என அரசு பணியாளர்கள் காலையிலிருந்து தண்ணீர் உணவு வழங்கவில்லை என கண்டித்து காஞ்சிபுரம் உத்தரமேரூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.