• Sat. Feb 15th, 2025

கோள்களை ஆர்வமுடன் கண்ட கோவை வாசிகள்!!

BySeenu

Jan 23, 2025

இன்று முதல் 25 ஆம் தேதி வரை வானில் ஒரே நேரத்தில் ஆறு கோடுகள் அணிவகுக்கும் அரிய நிகழ்வு நடைபெறும். கோவையில் வந்து, வந்து மறைந்த கோள்களை ஆர்வமுடன் கண்ட கோவை வாசிகள்… !!!

கோவை, கொடிசியா பகுதியில் உள்ள அறிவியல் மையத்தில் ஒரே நேரத்தில் ஆறு கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வை காண ஆர்வமுடன் வந்த பொதுமக்கள், மேகமூட்டத்தால் வந்து, வந்து சென்றதை ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்.

பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரே நேரத்தில் பல கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதைப் போல தோன்றுவதை கோள்களின் அணிவகுப்பு என்கின்றார்கள். சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் வெவ்வேறு தூரங்களிலும், வேகத்திலும் சூரியனை சுற்றி வருகின்றன. இதனால் பூமியில் இரவு நேரத்தில் அவை ஒன்றுக் கொன்று தொடர்புடையதாக நகர்கின்றன. சில நேரங்களில் அவற்றின் பாதைகள் குறுக்கிடுவதைப் போல தோன்றும், இது ஒரு சீரமைப்பு அல்லது இணைப்புக்கு வழிவகுக்கும். ஆனால் கோள்களின் சீரமைப்பு அல்லது அணிவகுப்பு என்பதே விண்வெளியில் ஒரு சரியான நேர்கோட்டு அல்ல. இது ஒரு தற்காலிக சீரமைப்பு மட்டுமே, இருப்பினும் சூரிய மண்டலத்தில் கோள்கள் அனைத்தும் ஒரே தளத்தில் சூரியனை சரியாக சுற்றி வராததால், இரண்டுக்கும் மேற்பட்ட கோள்கள் ஒரே நேரத்தில் இணைவது ஒப்பிட்ட அளவில் அரிதானது. அந்த வகையில் இன்று முதல் இந்த மாதத்தின் இறுதி வரையிலும் ஆறு கோள்களின் அணிவகுப்பு என்ற அறிய வான் நிகழ்வு நடைபெறுகிறது. வருகிற 25 – ம் தேதி ஆறு கோள்களின் அணிவகுப்பு உலகமெங்கும் உள்ள பெரும்பாலான இடங்களில் நன்கு தெரியும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பின்பு செவ்வாய், வியாழன் , யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி, சனி, ஆகிய ஆறு கோள்கள் வானில் இணைய உள்ளன. இதில் செவ்வாய், வியாழன் , வெள்ளி, சனி ஆகிய நான்கு கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும். நெப்டியூன், யுரேனஸ் தொலைநோக்கு சக்தி வாய்ந்த பைனாக்குலர் மூலமாகவே காண முடியும். இந்த அறிய வான் நிகழ்வை ஒட்டி கோவை மண்டல அறிவியல் மையம் பொது மக்களுக்காக இரவு வான் நோக்கும் சிறப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இன்று முதல் வருகிற 25 ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. தினசரி மாலை ஆறு மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வை பொதுமக்கள், மாணவ – மாணவிகள் ஆர்வமுடன் காண வந்து இருந்தனர். வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சிறிது நேரம் வந்து வந்து மறைந்த கோள்களை அங்கு வந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும் இந்த மாதம் இறுதி வரை நிகழ்வதால் தெளிவாக காணும் வரை தொடர்ந்து இங்கு வந்து அதனை பார்வையிட வர உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.