• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட சடலம் மீட்பு – போலீசார் விசாரணை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மயானபகுதியில் பிளாஸ்டி கவரில் சுற்றப்பட்ட நிலையில் உள்ள பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால்டு மயான பகுதியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் பிணம் ஒன்று கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து இன்ஸ்பெக்டர் கண்மணி உத்தரவின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலை செய்துவிட்டு நபரின் உடலை மயானத்தில் வீசி சென்றுள்ளனர்களா. அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.


எமரால்டு மயானத்தில் பிணமாக மீட்கப்பட்ட நபருக்கு 60 இதற்கு மேல் இருக்கும் ஆறு மாதத்திற்கு முன்பு உடலை இங்கு வீசி சென்று இருக்கலாம் கொலை செய்த பின்ன உடலைக் கொண்டு வந்து வீசியது போல் தெரியவில்லை .ஏனென்றால் உடலை உற்று நோக்கும்போது பிரேதா பரிசோதனை செய்த உடலை தான் பிளாஸ்டிக் கவரில் சுற்றிக் கொடுப்பார்கள் .எனவே ஏற்கனவே மருத்துவமனையில் பிரோத பரிசோதனை செய்த உடலை இங்கு கொண்டு வந்து போட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது . இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது