S.R.பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தமிழ் ராஜ் தயாரித்துள்ள படம் மெய்ப்பட செய்
இந்தப் படத்தில் ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மதுனிகா அறிமுகமாகிறார். மற்றும் ராஜ்கபூர், ‘ஆடுகளம்’ ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், ஞானப்பிரகாசம் E.G.P., ‘சூப்பர் குட்’ சுப்ரமணி, விஜய கணேஷ், தவசி, அட்டு முத்து, சிவா, ராஜமூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ் ராஜூம் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கிராமத்தில் இருந்து நகர வாழ்க்கை பற்றிய அனுபவமே இல்லாத நான்கு நண்பர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழ சென்னைக்கு வருகிறார்கள். இங்கே நடக்கும் அநியாயங்களை பார்த்து வியக்கின்றனர்.
ஒன்றும் தெரியாமல் கிராமத்தில் வாழ்ந்த நாமே இதை தட்டிக் கேட்க வேண்டும் என்று துடிக்கையில் இங்கே இருக்கும் யாருமே அதை கண்டு கொள்ளாமல் சுயநலமாக இருப்பது எதனால்..? அவர்களது சூழ்நிலை என்ன..? ஏன் தட்டி கேட்க மறுக்கிறார்கள்..? என்ற அவர்களது கேள்விகளுக்கு கிடைக்கும் விடைதான் ‘மெய்ப்பட செய்’ படம்.
தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு அருகேயிருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹீரோ ஆதவ் பாலாஜி. தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த இவர் படித்திருந்தாலும் வேலைக்குப் போகாமல் காதலிப்பதையே ஒரு தொழிலாகச் செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த நாயகி மதுனிகாவை காதலிக்கிறார் ஆதவ்.இந்தக் காதல் விவகாரம் பெரிதாகி இரு வீட்டாருக்கும் விஷயம் தெரிகிறது. அதோடு இந்தக் காதலினால் இரண்டு ஜாதிகளை சேர்ந்த இளைஞர்களும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள்.ஊரில் இருந்தால் வாழ விட மாட்டார்கள் என்று நினைத்த காதலர்கள் ஊரிலேயே திருமணம் செய்து கொண்டு தனது நண்பர்களுடன் ஊரைவிட்டு தப்பித்து சென்னைக்கு வருகிறார்கள்
சென்னையில் ரவுடிக் கும்பலின் தலைவரான ஜெயபாலின் வீட்டில் வாடகைக்குக் குடியேறுகிறார்கள். அந்த வீட்டின் பின்புறத்தில் ஒரு பெண்ணின் உடல் புதைக்கப்பட்டிருப்பதை அறியும் ஹீரோ, இதை போலீஸிடம் போய் சொல்கிறார்.போலீஸில் புகார் சொல்லப்பட்ட விஷயத்தை அறியும் ரவுடி கும்பல் ஹீரோ, ஹீரோயின், மற்றும் நண்பர்களை அடித்துத் துவைக்கிறது. இவர்களைக் காப்பாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் இவர்களது வாக்குமூலத்தை வைத்து முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் ரவுடி கும்பலை கைது செய்து சிறையில் தள்ளுகிறார்.ஆனால் இந்த வழக்கு விசாரணையின்போது போதிய சாட்சியங்கள் இல்லாததால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் ஹீரோவும், அவரது நண்பர்களும் எடுக்கும் முடிவு என்ன.. அந்த ரவுடிக் கும்பல் என்ன ஆனது என்பதுதான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி.
ஹீரோவாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜிக்கு இது முதல் படம். ஆனால் அது தெரியாதது போலவே காதல், செண்டிமெண்ட், சண்டைக் காட்சிகள் என்று அனைத்திலும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
நாயகி மதுனிகா சுமாரான அழகு என்றாலும் தன்னால் முடிந்த அளவுக்கு நடித்துள்ளார். நாயகியின் தாய் மாமன் வேடத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ் செல்வம், வில்லன் வேடத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.‘கட்ட கஜா’ என்ற தாதாவாக நடித்திருக்கும் ஆடுகளம் ஜெயபால் தனது மிரட்டலான கண்களாலேயே தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய தோற்றமும், வசன உச்சரிப்பும் வில்லன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளது.மேலும் நேர்மையான இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஓ.ஏ.கே.சுந்தர், நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணி, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜ்கபூர், பெஞ்சமின், ராகுல் தாத்தா, நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் என்று படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஆர்.வேலின் ஒளிப்பதிவு கலர்புல். பாடல் காட்சிகளில் திரையில் ஒரு மாயாஜாலத்தையே செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளை மிரட்டலாக காட்சிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் பரணியின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டனை கொடுப்பதோடு, மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் வேலன். என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதில் உள்ள சந்து பொந்துகள் வழியாக குற்றவாளிகள் மிக எளிதாகத் தப்பித்து விடுவதால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் விரைவாகும், இதைவிடவும் அதிகப்படியான தண்டனைகளையும் வழங்க வேண்டும் என்கிறார் இயக்குநர்.
இயக்குநரின் எண்ணம் சரிதான். ஆனால் அதற்காக அவர் எடுத்துக் கொண்டிருக்கும் கதைக் களம்தான் தவறானதாக உள்ளது.
வேலைக்கே போகாத ஒருவனுக்கு காதல்தான் முக்கியமா..? கல்யாணம் செய்த பின்பு வேலை தேடும் ஹீரோவுக்கு பாலியல் குற்றவாளிகளைத் தானே தண்டிக்கும் அளவுக்கு சிறப்பறிவு இருப்பதெல்லாம் ரொம்பவோ டூ மச்சான கேரக்டர் ஸ்கெட்ச்.
அதோடு சட்டமும், நீதிமன்றங்களும் குற்றங்களைத் தடுப்பதற்கு இருக்கும்போது நாமே சட்டத்தைக் கையில் எடுத்துத் தண்டனை தருவதெல்லாம் ரொம்பவே தவறு இயக்குநரே… குற்றவாளிகளை கொலை செய்தாலும் அதுவும் ஒரு கொலைதான். அப்படி கொலை செய்வதையெல்லாம் நியாயப்படுத்துவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை இயக்குநரே.
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]
- ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகளுக்கு சிறைகர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து […]
- இன்று இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடு பிறந்த தினம்இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட தமிழகத்தின் அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு பிறந்த தினம் இன்று […]
- பெரம்பலூரில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேனர் வைத்த தி.மு.க பிரமுகர்..!பெரம்பலூரில் தி.மு.க பிரமுகர் ஒருவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக பேனர் வைத்துள்ளதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.பெரம்பலூர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேரங்கோடு கிராம சபைக் கூட்டம்உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கையுன்னியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து சேரங்கோடு […]
- கிருஷ்ணகிரி ஆணவக்கொலை..,
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம்..!கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன […] - புதுச்சேரியில் தண்ணீர் விழிப்புணர்வு குறித்த ‘வாட்டர் மேட்டர்ஸ் மேளா’..!ஒரு வருடத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.உலக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உங்களை நிர்ணயிக்கும் இரண்டு விஷயம். 1) உங்களிடம் ஒன்றுமில்லாதபோது நீங்கள் காக்கும் பொறுமை.2) உங்களிடம் […]
- இன்று உலக வானிலை நாள்உலக வானிலை நாள் (World Meteorological Day) (மார்ச் 23).உலக வானிலை நாள் ( World […]
- இன்று எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய அமாலி எம்மி நோய்தர் பிறந்த தினம்இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய ஜெர்மானிய கணிதவியலாளர் அமாலி எம்மி நோய்தர் பிறந்த […]