ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் வழங்க தயாராக இருக்கிறோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய் நிறுத்தப்பட்டது. இதனால் உலகளாவிய பாதிப்பு எற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் எண்ணெய் வழங்க தயார் என புதின் அறிவித்துள்ளார். வெளி சந்தையில் குறைந்த விலைக்கு எண்ணெய் விற்க மாட்டோம் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.