• Wed. Apr 24th, 2024

இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றிய பி.வி.சிந்து

Byமதி

Dec 4, 2021

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியில், குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்து, குரூப்-ஏ பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, இந்தியாவின் பி.வி.சிந்துவை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தது. முதல் செட்டை 21-15 என்ற புள்ளிக்கணக்கில் சிந்துவும், இரண்டாவது செட்டை 15-21 என்ற புள்ளிக் கணக்கில் அகானேவும் கைப்பற்றினர். மூன்றாவது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *