விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் ஆதிரை கண்ணன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் சிறப்பு திருவிளக்கு பூஜை மற்றும் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி மற்றும் வில்லிசை கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜை தொடர்ந்து ஆதிரை கண்ணன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது



