தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், ஆயிரக்காண மக்கள் வசிக்கின்றனர். அடிப்படை வசதிகளான ரோடு, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகள் சொல்லும்படியாக நிறைவேற்றவில்லை என்பது வார்டு மக்களின் அன்றாட குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.
இது புறம் இருக்க, தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துவதற்காக, இங்குள்ள பிரசித்து பெற்ற கௌமாரியம்மன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் வீரபாண்டியில் எப்போதும் பக்தர்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். வார்டு மக்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் முகம் சுளிக்கும் வகையில் இங்குள்ள பெரும்பாலான ‘பப்ளிக் டாய்லட்’ கள் காட்சியளிக்கின்றன.
இதில் ஒரு சில பயன்பாட்டில் இருந்தாலும், தண்ணீர் வசதி இன்றி ‘கப்’ அடித்து வருகிறது. இதனால் ‘அவசர’ நேரங்களில் உள்ளே செல்வோர் மூக்கை பொத்திக் கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.
இதுபோன்ற கொடுமை எல்லாம் வீரபாண்டிக்கு வந்து, செல்லும் பக்தர்கள் அனுபவித்து செல்வதை காணமுடிகிறது. குறிப்பாக, வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு செட்டியார் தெருவில், கடந்த 2007-08ம் ஆண்டு பல லட்ச ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட நவீன சுகாதார வளாகம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது.

இங்குள்ள பொருட்கள் வைப்பு அறையும் எப்போது பார்த்தாலும் பூட்டியே காணப்படுகிறது. இதனருகே பெண்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட ‘டாய்லட்’ டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக வார்டு மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எது எப்படியோ, எந்த நோக்கத்திற்காக இதுபோன்ற நவீன ‘டாய்லட்’ கள் கட்டி முடிக்கப்பட்டதோ, அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னதாக, இந்த அவலநிலை குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்ள நமது ‘அரசியல் டுடே’ செய்தியாளர், பேரூராட்சி அலுவலகத்திற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டார். அதற்கு, அலைபேசியை எடுத்தவுடன் சொல்லுங்க.., வாசுமலை கிளார்க் பேசுறேன், ‘பப்ளிக் டாய்லட்’ இப்புடித்தாங்க….. இருக்கும் இதைப் போய் பெருசா பேசிகிட்டு,என கூறி, சட்டென்று…துண்டிப்பு செய்தார்.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]