மதுரை வாடிப்பட்டி அருகே மனைவியை கொன்ற கணவனை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கட்டக்குளத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி (30) இவரது கணவர் ராஜேஷ் கண்ணன் (40). இவர்களுக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு மகள்கள் உள்ளனர்.பூங்கொடி மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார் . அவரது கணவர்.ராஜேஷ் கண்ணன் வேலை எதுவும் செய்யாமல் ஊதாரியாக சுற்றித்திரிந்தார். மேலும்மது கஞ்சாஉள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்திக்கொண்டு மனைவியுடன் தினமும் சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். கணவரின் தொந்தரவு தாங்காதால்.கடந்த ஒரு வாரம் முன்பாக பூங்கொடி கோபித்துக் கொண்டு அதே ஊரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று பின்பு அங்கிருந்தபடியே அவர் வேலைக்கு சென்று வந்துள்ளார் இதற்காக தினமும் அருகில் உள்ள தாலுகா அலுவலக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அங்கிருந்து மதுரைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.இதனால் மனைவியை பிரிந்த கணவர் ராஜேஷ் கண்ணா தினந்தோறும் பஸ் நிறுத்தத்திற்கு சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற ராஜேஷ் கண்ணா பேருந்துக்காக காத்திருந்த மனைவிபூங்கொடியை கத்தியால் சாரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் நிலைகுலைந்த பூங்கொடி அருகில் உள்ள வாகனம் மூலம் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு மதுரை அரசு மருத்துவமனை சென்றவர். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதுகுறித்து பூங்கொடியின் உறவினர்கள் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு வார காலம் ஆகியும் காவல்துறை இதுவரை குற்றவாளியை கைது செய்யாததை கண்டித்து இன்று மாலை மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை கட்டக்குளம் பிரிவு அருகில் சாலை மறியலில் ஈடுபடச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் ஒரு வாரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து விடுவதாக மறியல் செய்ய முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அதனை ஏற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.இது குறித்து பூங்கொடியின் உறவினர்கள் கூறும் போது விரைவில் குற்றவாளி கைது செய்யப்படாவிட்டால் உறவினர்களை ஒன்று திரட்டி மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]