பாகுபலி என்கிறதெலுங்கு சினிமாவை இந்திய சினிமாவாக அதன் பிரம்மாண்டத்தின் மூலம் மாற்றி வெற்றிபெற்றவர் இயக்குனர் ராஜமவுலி பிரம்மாண்டம் என்றாலே இயக்குனர் ஷங்கர் என்கிற மனநிலையில் இருந்த தமிழ் ரசிகர்கள் பாகுபலி படத்தின் வருகைக்கு பின் ராஜமவுலியின் ரசிகர்களாக மாறிப்போனதை மறைக்க முடியாது அது நேற்றையதினம்(27.12.2021) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற ரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் மூலம் வெளிப்பட்டது.
இயக்குநர் ராஜமௌலியின் ‘RRR’ படம் ஜனவரி 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ‘ப்ரீ-ரிலீஸ்’ நிகழ்ச்சி சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது இந்த நிகழ்வில் இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட படக்குழுவுடன் நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், கவிஞர் மதன் கார்க்கி, மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, R.B.சௌத்ரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினரை வாழ்த்திப் பேசிய உதயநிதி ஸ்டாலின், இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சினிமா சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறேன். இதற்கு ஒரே காரணம், இயக்குநர் ராஜமவுலி மட்டுமே. அவரின் மிகப்பெரிய ரசிகன் நான். வந்தவுடனே நான் அவரிடம், இந்தப் படம் ‘பாகுபலி 2’வின் சாதனைகளை முறியடிக்கும் என்று சொன்னேன்.எனக்கும் இந்தப் படத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம்.
அப்போது இதே ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண் நடித்த ‘மகதீரா’ படம் வெளியானது. படம் தெலுங்கில் பயங்கர ஹிட். அதன் தமிழ் பதிப்பானமாவீரன்’ 2011-ல் வெளியானது. அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அந்தப் படம் தொடர்பான நிகழ்வில், இயக்குநர் ராஜமௌலி என்னிடம் பேசினார். ‘இந்தப் படத்தை உங்கள் நிறுவனமான ரெட் ஜெயன்ட்டுக்குக் கொடுத்திருக்கிறோம். எனக்கு ஒரேயொரு ஆசை. எனக்கு சென்னை சத்யம் தியேட்டர் மிகவும் பிடித்த திரையரங்கம். அதன் பெரிய ஸ்க்ரீனில் இந்தப் படத்தை நீங்கள் வெளியிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
அதேபோல் செய்தோம்.இந்த ‘RRR’ படத்தை மூன்று ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட்தான் வெளியிடுகிறது. இப்போது சொல்கிறேன். சத்யம் தியேட்டரில் 6 ஸ்க்ரீன்கள் இருக்கின்றன. அதில் 5 ஸ்க்ரீன்களில் நிச்சயம் ‘RRR’தான் வெளியாகும். இந்தப் படத்தின் வெற்றி உறுதிதென்னிந்திய சினிமாவின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தப் படம் இருக்கும்” என்று தெரிவித்தார்.
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]
- குறள் 449முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.பொருள் (மு.வ):முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் […]
- ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த்இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் […]
- மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் – அமைச்சர் தகவல்சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுரத்து செய்யப்படுவதாக […]
- வீடியோ கேமுக்கு அடிமையான மாணவன் தற்கொலையை நேரடி ஒளிபரப்பு செய்த கும்பல்கேரளாவில் வீடியோ கேமுக்கு அடிமை; இன்டர்நெட்டில் நேரலையாக ஒளிபரப்பி மாணவனை தற்கொலை செய்ய வைத்த கும்பல்கேரள […]