அலுவலக சாவியை விவகாரத்தில் ஓபிஎஸ் தொடர்ந்தமேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ்சுக்கு வழங்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ்க்கு வழங்கியது செல்லும் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம் இந்த வழக்கை சிவில் சூட்டில் தாக்கல் செய்து சட்டரீதியாக நடத்துவதற்கு ஓபிஎஸ்க்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.