பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து முறைப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொங்கல் பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகள் வரும்போது அதனையொட்டி சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்கள் வந்தாலோ அல்லது ஓரிரு நாட்கள் விடுப்பு எடுத்தோ தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதை அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்ற நாட்களில் ரயில் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்ய டிக்கெட் கிடைக்காதவர்கள் தனியார் பேருந்துகளை நாடுவதும், தனியார் பேருந்து நிறுவனங்கள் இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதிக கட்டணம் வசூலிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகின்றது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியதோடு, இது ஒரு பகல் கொள்ளை என்றும் விமர்சித்து இருந்தார். ஆனால், இன்று அவர் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், பண்டிகை காலங்களில் தனியார் பேருந்து நிறுவனங்களால் வசூலிக்கப்படும் கட்டணம் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்தும், நடவடிக்கை ஏதுமில்லை. மாறாக, தனியார் பேருந்துகளின் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய முடியாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறார். அமைச்சரின் இந்தப் பேச்சு, தனியார் பேருந்து கட்டண வசூலை மேலும் அதிகரித்துள்ளது. ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கின்றபோது ஒரு பேச்சு. ஒருவேளை இதுபோன்று மாறி, மாறி பேசுவதுதான் திராவிட மாடல் போலும்!
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பணடிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு 2,500 ரூபாய், திருநெல்வேலி செல்வதற்கு 3,300 ரூபாய், கொச்சின் செல்வதற்கு 3,000 ரூபாய் என தங்களுக்கு ஏற்றாற்போல், தங்களின் விருப்பப்படி தனியார் நிறுவனங்கள் ஏழை, எளிய மக்களிடமிருந்து கட்டணங்களை வசூலித்தன. இந்தக் கட்டணம் சாதாரண நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட மூன்று மடங்கு அதிகம். எனவே, முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்து நிறுவனங்களால் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டணத்தை முறைப்படுத்தவும், தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைத் தடுக்கவும், அதிக அளவிலான அரசுப் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ஐஸ்கிரீம் கோன் போல் டீ, காபி கப்..,
ஆசிரியையின் அசத்தலான தயாரிப்பு..!ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தண்ணீர் மற்றும் டீ, காபி பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தினால் அது […] - காஷ்மீரில் கொட்டும் பனியில் கர்ப்பிணியை தோளில் சுமந்து சென்ற ராணுவவீரர்கள்..!ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவின் காரணமாக, நிறைமாத கர்ப்பிணியை மருத்துவ சிகிச்சைக்காக ராணுவ […]
- பழனி அரசு மருத்துவமனையில்..,
தூய்மைப்பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் […] - சிந்தனை கருத்தாளர் விருது பெற்ற மதுரை மாணவிக்கு பாராட்டு விழாமதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் […]
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]
- பொது அறிவு வினா விடைகள்
- சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரைநாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா […] - கிராமி விருது விழாவில் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்த இந்தியப் பெண்..!அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய இசைக் கலைஞர் அனெட்பிலிப் காஞ்சிபுரம் பட்டுடுத்தி […]