திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி நாளை காலை சாமி தரிசனம், அனைத்து வி.ஐ.பி. தரிசனமும் ரத்து, பிற வகை தரிசனமும் தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆகையால், அனைத்து வி.ஐ.பி. தரிசனத்தையும் ரத்து செய்து தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் பிரதமருடன் செல்வார் என தகவல். திருப்பதி முழுவதும் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.