• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

சிறுமிகள் தொடர்பான ஆபாச படம் வழக்கு – சி.பி.ஐ. அதிரடி சோதனை

ByA.Tamilselvan

Sep 24, 2022

சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சிங்கப்பூரில் உள்ள இன்டர்போல் அளித்த தகவலின்படி, சி.பி.ஐ. இது குறித்து 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. நாடு முழுவதும் இன்று 56 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. 19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.