பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிந்ததாக கூறி இருந்தார். அதற்கு அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
ஓட்டுக்காக இந்து மக்களை ஏமாற்றும் செயலை திமுக நிறுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது .. “மதுரை எய்ம்ஸ் ஆரம்பகட்ட பணிகள் 95% முடிந்தது என்று தான் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா கூறினார். அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர். இந்து மக்களை ஆ.ராசா அவமதித்ததை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்.