

தமிழ் சின்னத்திரையில் இப்போது ஏராளமான நடிகர்கள் வந்துவிட்டார்கள். புதிய நடிகர்கள் வர வர இதற்கு முன் நடித்துவந்த நடிகர்களை மக்கள் மிகவும் மிஸ் செய்கிறார்கள். அப்படி ரசிகர்களால் சில வருடங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இருவரும் ராஜா ராணி என்ற தொடரில் இணைந்து நடிக்க இப்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்துவிட்டார்கள். தற்போது இவர்கள் இருவரை குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது இருவரும் ஒன்றாக இணைந்து விஜய் டிவியில் சரவணன்-மீனாட்சி தொடரின் புதிய பாகத்தில் நடிக்கிறார்கள் என தகவல்கள் வந்தன. ஆனால் உண்மையில் அந்த தகவல் வதந்தியாம், இது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.
