” நான் அமைச்சராக இருந்தாலும், கவுன்சிலராக இருந்து நகரின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என, திண்டுக்கல்லில் ரூ. 45 லட்சம் செலவில் லப்பை குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைத்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.
திண்டுக்கல் மாநகராட்சி
35வது வார்டுக்கு உட்பட்டது, லப்பை குளம். இது பதினோரு ஏக்கர் பரப்பளவு கொண்டது. பரந்து விரிந்து காணப்படும் இக்குளத்தில் நீர் ஆதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. தவிர பல வருடங்களாக தூர் வாரப்படாததால், மண் மேடு அதிகளவு நிறைந்துள்ளது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீர் ஆதாரத்தை பேணி காக்கும் வகையில், இக்குளம் ரூ. 45 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை, அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று (பிப்.,7) துவக்கி வைத்தார். மாநகராட்சி மேயர் இளமதி, மாவட்ட ஆட்சியர் விசாகன், மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஐ. பெரியசாமி கூறியதாவது: திண்டுக்கல் நகருக்கு புதிதாக குடிநீர் திட்டம் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நான் அமைச்சராக இருந்தாலும், கவுன்சிலராக இருந்து நகரின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். திண்டுக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு ஆக்கிரமிப்பு உள்ளது. இது தொடர்பாக கூட்டம் நடத்தி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பாளர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தயவு தாட்சண்யமின்றி அகற்றப்படும். இல்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]
- புதிய கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை […]
- முகம் வெள்ளையாக:பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறுபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் […]
- மகிந்த ராஜபக்சேவிடம் 5 மணி நேரம் விசாரணை-கைதாக வாய்ப்பு?இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் ராஜபக்சேவிடம்5 மணி […]
- காலிஃப்ளவர் மசாலா:தேவையானவை :காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது […]
- பெட்ரோல் இல்லை, பணம் இல்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டுவிட்பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ளது.இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் […]
- சிந்தனைத் துளிகள்• எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது. • தன் குற்றம் மறப்பதும் பிறர் […]
- பொது அறிவு வினா விடைகள்1.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?இங்கிலாந்து2.டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?அமெரிக்கா, மலேசியா3.யுவான் […]
- குறள் 214:ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.பொருள் (மு.வ):ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் […]
- இந்திய மக்களைப் பிரிக்கும் வேலையை ஒவைசி செய்கிறார்- பாஜக தலைவர்ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி நாட்டை இந்திய மக்களை பிரித்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். […]
- மனுஷனா இருந்ததுபோதும்… நாயாக மாறிய ஜப்பான் மனிதர்..ஜப்பானில் மனிதனாய் வாழ்வதை வெறுத்த நபர் ஒருவர் ஏகமாக செலவு செய்து நாய் உடை அணிந்து […]