• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் வைகை ஆற்றில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

ByKalamegam Viswanathan

Mar 16, 2025

மதுரை சோழவந்தான் வைகை ஆற்றில் அழுகிய நிலையில் இருந்த40 வயதான ஆண் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் கீழ ஒட்டுப்பச்சேரி வைகை ஆற்றின் கரையோரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில்சம்பவ இடத்திற்கு சென்ற சோழவந்தான் காவல்துறையினர் பிணத்தைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் அடையாளம் தெரியாத நிலையில் இருந்ததால் வைகை ஆற்றில் நீரில் அடித்து வரப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.