• Fri. Jan 17th, 2025

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

ByIyamadurai

Dec 27, 2024

மறைந்த இந்தியா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு உயிரிழந்தார். இதனை அடுத்து மன்மோகன் சிங் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன் பின் மன்மோகன் சிங் குடும்பத்தினருக்கு அமித்ஷா ஆளுதல் கூறினார்.