• Sat. Apr 27th, 2024

அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

ByA.Tamilselvan

Jul 8, 2022

ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்
ஜப்பானில் பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருந்த முன்னாள் பிரதமர்ஷின்சோ அபே மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சகிச்சை பலனின்றி மறைந்தார்.
மறைந்த அபேவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது ட்விட்டரில் “அன்பு நண்பர் அபே மறைவு சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. .சர்வதேச அரசியல்வாதி ,சிறந்த தலைவர்,நல்ல நிர்வாகியாக திகழ்ந்தவர் அபே.அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை ஒருநாள் தேசிய துக்கநாளாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *