• Sat. Apr 27th, 2024

என்னை புகழ்ந்து பேச வேண்டாம்… ப்ளீஸ்.. சட்டசபையில் ஸ்டாலின் வலியுறுத்தல்..

Byகாயத்ரி

Apr 8, 2022

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா (திமுக) முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேச தொடங்கினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி நேரத்தின்போது இதுபோல் புகழ்ந்து பேசக் கூடாது என அறிவுறுத்தினார். அதாவது முதல்வர் கூறியதாவது “கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள் என எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும், ஆளும்கட்சி வரிசையில் இருந்தபோதும் நான் முன்பே பல்வேறு முறை வலியுறுத்தி இருக்கிறேன். ஆகவே புகழ்ந்துபேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மீண்டும் இதை நான் வலியுறுத்துகிறேன். ஆளும் கட்சியை சேர்ந்த நமது உறுப்பினர்கள் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்காமல் கேள்வியை மட்டும் கேளுங்கள், அதற்காக மட்டும் அதை பயன்படுத்துங்கள் என்று அவர் கூறினார்.

இதையடுத்து உறுப்பினர் சண்முகையா நேரடியாக கேள்விக்கு வந்தார். இதேபோன்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் (சிங்காநல்லூர்) எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ., பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி போன்றோரை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் குறுக்கிட்ட சபாநாயகர் நேராக கேள்விக்கு வாருங்கள் என்று கூறினார். இதற்கு உறுப்பினர் ஒரே ஒரு நிமிஷம் முதன் முறையாக பேசுகிறேன், இனி இப்படி பேச மாட்டேன் என்று கூறி தன் கேள்வியை கேட்டார்.

அதன்பின் அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது “உறுப்பினர் இந்த அவையில் முதல் முறையாக பேசுகிறார். பொதுவாக கேள்வி நேரத்தின்போது இப்படி பேசக்கூடாது. அனைவரும் அவர்கள் தலைவர்கள் மீது பக்தி உண்டு, அவர்களுக்கு வணக்கம் செலுத்த உரிமை உண்டு. எனினும் கேள்வி நேரத்தில் இதெல்லாம் குறைக்கப்பட வேண்டும். கேள்வி என்பது ஒரு வரியில் சுருக்கமாக கேட்க வேண்டும் என்பதால் உறுப்பினர்கள் இதனை பின்பற்ற வேண்டும். அதேபோல் அமைச்சர்களும் சுருக்கமாக பதிலளிக்க வேண்டும். கேள்வி நேரமே நீண்டநேரம் எனில் மானிய கோரிக்கை எப்படி நடத்த முடியும். குறிப்பிட்ட நேரத்துக்குள் கேள்வி நேரத்தை முடிக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *