சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா (திமுக) முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேச தொடங்கினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி நேரத்தின்போது இதுபோல் புகழ்ந்து பேசக் கூடாது என அறிவுறுத்தினார். அதாவது முதல்வர் கூறியதாவது “கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள் என எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும், ஆளும்கட்சி வரிசையில் இருந்தபோதும் நான் முன்பே பல்வேறு முறை வலியுறுத்தி இருக்கிறேன். ஆகவே புகழ்ந்துபேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மீண்டும் இதை நான் வலியுறுத்துகிறேன். ஆளும் கட்சியை சேர்ந்த நமது உறுப்பினர்கள் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்காமல் கேள்வியை மட்டும் கேளுங்கள், அதற்காக மட்டும் அதை பயன்படுத்துங்கள் என்று அவர் கூறினார்.
இதையடுத்து உறுப்பினர் சண்முகையா நேரடியாக கேள்விக்கு வந்தார். இதேபோன்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் (சிங்காநல்லூர்) எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ., பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி போன்றோரை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் குறுக்கிட்ட சபாநாயகர் நேராக கேள்விக்கு வாருங்கள் என்று கூறினார். இதற்கு உறுப்பினர் ஒரே ஒரு நிமிஷம் முதன் முறையாக பேசுகிறேன், இனி இப்படி பேச மாட்டேன் என்று கூறி தன் கேள்வியை கேட்டார்.
அதன்பின் அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது “உறுப்பினர் இந்த அவையில் முதல் முறையாக பேசுகிறார். பொதுவாக கேள்வி நேரத்தின்போது இப்படி பேசக்கூடாது. அனைவரும் அவர்கள் தலைவர்கள் மீது பக்தி உண்டு, அவர்களுக்கு வணக்கம் செலுத்த உரிமை உண்டு. எனினும் கேள்வி நேரத்தில் இதெல்லாம் குறைக்கப்பட வேண்டும். கேள்வி என்பது ஒரு வரியில் சுருக்கமாக கேட்க வேண்டும் என்பதால் உறுப்பினர்கள் இதனை பின்பற்ற வேண்டும். அதேபோல் அமைச்சர்களும் சுருக்கமாக பதிலளிக்க வேண்டும். கேள்வி நேரமே நீண்டநேரம் எனில் மானிய கோரிக்கை எப்படி நடத்த முடியும். குறிப்பிட்ட நேரத்துக்குள் கேள்வி நேரத்தை முடிக்க வேண்டும் என்று கூறினார்.
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]
- குறள் 449முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.பொருள் (மு.வ):முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் […]
- ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த்இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் […]