‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் பாத யாத்திரை தொடங்கவிருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பீகாரின் சம்பாரனில் இருந்து 3,000 கி.மீ பாதயாத்திரையை அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கவிருப்பதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் பாத யாத்திரை நடத்துவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து அக்கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தி வந்தார். 2024 மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை வழங்கினார். இதற்காக பிரசாந்த் கிஷோர் பல முறை சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். ஆனால், அவரது நிபந்தனைகளுக்கு காங்கிரஸில் சில மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், காங்கிரஸில் இணையப்போவதில்லை என அறிவித்தார்.
இதையடுத்து ட்விட்டரில் பதிவிட்ட பிரசாந்த் கிஷோர், “உண்மையான மாஸ்டர்களான மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் இது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்கள் பிரச்சினைகளையும், மக்களின் நல்லாட்சிக்கான பாதையையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது” எனப் பதிவிட்டார். இதனால், பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சித் தொடங்குவதாக பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்குவதாக இன்னொரு ட்வீட்டையும் பி.கே பதிவிட்டதால் அங்கு கட்சி தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இன்று பீகாரில் செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், “‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்க இருக்கிறேன். அக்டோபர் 2ஆம் தேதி 3,000 கிமீ தூர பாத பீகாரின் சம்பாரனில் இருந்து தொடங்குறேன். அடுத்த மூன்று-நான்கு ஆண்டுகளுக்கு நான் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பேன்.” என அதிரடியாக அறிவித்துள்ளார்.
“எனக்கு இப்போது கட்சியோ, மேடையோ இல்லை. பீகாருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் மட்டுமே என்னிடம் உள்ளது.பீகாரில் தற்போதோ, சமீபமாகவோ எந்த தேர்தலும் வரப்போவதில்லை. அரசியல் கட்சி தொடங்குவது இப்போதைக்கு எனது திட்டத்தில் இல்லை.” என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி இப்போதைக்கு இல்லை எனத் தெரிவித்திருந்தாலும், அவரது பாத யாத்திரை, மக்கள் சந்திப்பு ஆகியவை அரசியல் கட்சி தொடங்க அச்சாரம் போடுவதாக அமைந்துள்ளன.
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]