நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லை என அண்மையில் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் தமிழகம்,ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கிராமப்புறங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல்வேறு இடங்களில் எரிபொருள் இல்லாமல் பெட்ரோல் இல்லை என போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.