• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வேளாண் கடன்கள் குறித்து மறு ஆய்வு செய்திட மனு..,

ByS. SRIDHAR

Jun 30, 2025

வேளாண்மையை அடையாள அட்டைகள் வழங்குவதற்கு திட்டங்களை விவசாயிகளுக்கு கொடுத்திட நில ஆவண உரிமை உள்ளோர்களை மட்டும் பதிவு செய்திட அரசு அறிவுறுத்திய நிலையில் இப்பதிவில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.

தமிழகத்தில் அறக்கட்டளை, மத நிறுவனங்கள், கிரையம் செய்தும் பத்திரப்பதிவு செய்து கொள்ளாதவர்கள், தனியார் நில குத்தகையாளர்களாக என சுமார் 70 சதம் விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் நில ஆவணப்பதிவு உள்ளவர்களை மட்டும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவதால் மிகப்பெரிய அச்சத்தில் இந்த விவசாயிகள் பதிவு செய்திட இயலாமல் உள்ளனர். ஏனெனில் இனி இந்த உதவி மற்றும் அரசுகளின் மட்டுமே பெற்றவர்களுக்கு அட்டை மானிய திட்டங்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பகுதியோருக்கு இந்த உதவிகள் இல்லை என்றால் பெரிய கொந்தளிப்பு ஏற்படும். இந்த நிலையில் தமிழகத்தில் வழக்கம்போல் மானியத் திட்ட உதவிகள் கிடைக்கும் என வேளாண் அலுவலர்களால் வாய்மொழியாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக இந்தக் குழப்ப நிலைகளுக்கு உரிய அறிவிப்பை செய்து நடைமுறைப்படுத்திட வேண்டும். எனவே ஒன்றிய அரசு மேற்கண்ட விவசாயிகள் அனைவரையும் இத்திட்டத்தில் இணைத்திடும் முறையில் அறிவித்து அடையாள அட்டைகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முறையில் பதிவு காலத்தை நீட்டித்திட வேண்டும்.

2) விவசாயிகள் நல நிதி (Kisan Saman Fund) என்பதும் நில ஆவண பதிவு வைத்துள்ளோர்களில் நிரந்தர வருமானம் இல்லாதவருக்கே வருடம் 6000 ரூபாய் விவசாயிகளை கொடுத்து வருவது என்பது வருமானத்தின் அடிப்படையில் பிரிக்கும் செயலாகும். இது விவசாயிகளிடையே பேதத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வேளாண்மையில் இயற்கை உள்ளிட்ட இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பு என்பது விவசாயிகள் அனைவருக்கும் பொதுவானது. எனவே ஒன்றிய அரசு வழங்கும் சாகுபடியாளர்கள் அனைவருக்கும் வேறுபாடின்றி நிதியை வருடத்திற்கு ரூ.12,000 என உயர்த்தி வழங்க வேண்டும்.

ஒரே நபர் இரு இடங்களில் கடன் பெறுவதை தவிர்க்கவும், திருப்பி செலுத்திய கடன் தவணை நிலை தகுதியை கொண்டு புதிய கடன் வழங்கிடவே சிபில் ஸ்கோர் பார்க்க அறிவுறுத்தியதாக, விவசாயிகளின் போராட்டங்களுக்குப் பதிவாளர் அறிவித்துள்ளார். விவசாயிகள் பின் மாநில கூட்டுறவு சங்கங்களின் போடுகிற மூலதனம் வயல்வெளி பகுதிகளாகும். இயற்கை பேரிடர் உள்ளிட்ட அனைத்து இடர்பாடுகளிலிருந்தும் தப்பித்தது தான் மிச்சம் என நொந்து போவதை தவிர விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை.

இதனால் சில காலங்களில் கடன் தவணை கெடு தவறிப் போகும். மேலும் கூட்டுறவு சங்கங்கள் கொடுக்க தவறுகிற வேளாண் இயந்திரங்களுக்கான கடன்களை அரசு மற்றும் வணிக வங்கிகளில் வருகின்றனர். இந்த நிலையில் வேளாண்மை தான் விவசாயிகள் பெற்று கடன்களில் வணிக வங்கிகளே கூட சிபில் ஸ்கோரை பொருத்தக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், கூட்டுறவு சங்கங்களில் வேளாண் நிலையிலும் சிபில் ஸ்கோரை அடிப்படையாக கடன்களை வழங்கிட எந்த எடுத்துக்கொள்ளக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.