• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை கோயில்களில் பஞ்சமி விழா

ByN.Ravi

Jul 11, 2024

மதுரை கோயில்களில் வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, வராஹி அம்மனுக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மனுக்கு, சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, பக்தர்களால் வராகி அம்மனுக்கு, பால், தயிர், மஞ்சள் பொடி, பன்னீர், சந்தனம் போன்ற திரவியங்களால், அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமாகி, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, விளக்கேற்றி வராஹி அம்மனுக்கு மஞ்சள் மாலை அணிவித்து சிறப்பு
பூஜைகள் செய்தனர் .
இதை அடுத்து,கோவில் நிர்வாகம் சார்பில் பக்தருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதே போல, மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் ஆலயத்திலும் மதுரை அண்ணாநகர், யானைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்திலும், வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதே போல மதுரை ஆலயத்தில், வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.