தமிழக சட்டசபை முதல் கூட்டத்தொடரில் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பனை வெல்லம் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பனை வெல்லம் 100 கிராம், 250 கிராம், 500 கிராம், ஒரு கிலோ என ரேசன் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் வாங்கிக்கொள்ளலாம் எனவும், கடைக்காரர்கள் வற்புறுத்தக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது.