• Mon. Jun 3rd, 2024

Trending

பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு

விவேகானந்தர் பாறையில் தியானத்தை முடித்துக் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், வானிலையை பொறுத்து ஹெலிகாப்டருக்கு பதிலாக சாலை மார்க்கமாக செல்லவும் மாற்று ஏற்பாடு உள்ளது.…

ஆசிய கையெறிப்பந்து போட்டியில் தமிழக போலீசார் சாதனை…

உஸ்பெகிஸ்தான் நாட்டின் டாஷ்கன்ட் நகரில் இம்மாதம் 14.05.2024 முதல் 20.05.2024 வரை 4-வது மத்திய ஆசிய கையெறிபந்து (Handball) போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு காவல்துறை கையெறிப்பந்து அணி வீரர்கள் கண்ணன்,கபில் கண்ணன் ஆகிய இருவரும் இந்திய அணிக்கு தேர்வாகினர். இப்போட்டியில்…

உலக புகையிலை எதிர்ப்பு தினம்

இந்தியாவில் முதன் முறையாக புகைப்பிடிப்பதை கைவிடுவதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய டிஜிட்டல் ஆடியோ கலந்துரையாடல் ஆலோசனையை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அறிமுகம் செய்தார். ஆண்டுதோறும் 30சதவீதம் பேர் புகை பிடிப்பதினால் புற்று நோயுடன் மாரடைப்பு ஏற்பட்டு வருவதாகவும்,அதே போல் பெற்றோர்கள்…

இனி ஒரு மணி நேரத்தில் கட்டணமில்லா சிகிச்சைக்கு ஒப்புதல்

மருத்துவக் காப்பீடு பெற்ற பயனரிடமிருந்து கோரிக்கை வரப்பெற்ற ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளில் கட்டணமில்லாத சிகிச்சை கிடைப்பதை காப்பீட்டு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுக் கழகம் அறிவுறுத்தியிருக்கிறது.அதுபோல, மருத்துவமனையிலிருந்து பயனாளர் வீடு திரும்புவதற்கான…

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வர்த்தக சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.1,840.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து அறிவித்து வருகின்றன.…

இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைகிறது தேர்தல் திருவிழா

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 6 கட்டங்களை நிறைவு செய்துள்ள நிலையில், இன்று 7வது கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் திருவிழா நிறைவடைகிறது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 6 கட்டத் தேர்தல் சுமூகமாக நடைபெற்று…

ஒரு கிராம் தங்கம் ரூ.1000 என கூறி பணத்தை சுருட்டிய பெண் கைது

ஈரோட்டில் உள்ள பிரபல ஏஜென்ஸி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1000 எனக் கூறி பணத்தை சுருட்டியது தெரியவந்த நிலையில், அந்தப் பெண் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கலை அடுத்த காந்திநகரைச் சேர்ந்தவர் சசிகலா.…

அம்பாசமுத்திரம் நகராட்சியில் அடுக்கடுக்கான முறைகேடு புகார்

அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஒரு முககவசத்தின் விலை ரூ.630 மற்றும் பல்வேறு அடுக்கடுக்கான முறைகேடுகள் நடப்பதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.அம்பாசமுத்திரம் நகராட்சியில் நடைபெற்ற முறைகேடு குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து…

கொடைக்கானல் பூண்டி அருங்காட்டு குளத்தில் அனுமதியின்றி படகு இயக்கியதில் வாலிபர் பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி படகு இயக்கப்பட்டு வருகிறது. இதையொட்டிய கொடைக்கானல் சர்வதேச பள்ளியில் பணியாற்றும் 3 பேர் படகில்…

கட்டிட வேலையின் போது குடிநீர் தொட்டியில் இறங்கிய 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கட்டிட வேலையின் போது குடிநீர் தொட்டியில் இறங்கிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை, கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் புதிய வீடு கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தது. அதில் கூலி தொழிலாளர்கள் 7…