• Mon. Apr 29th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 16, 2022

சிந்தனைத் துளிகள்

• ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது. நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால், அதில் களைகள்தான் முளைக்கும்.

• பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக்கூடும்.

• உங்களுக்குத் தேவையான சக்தியும், செயல் ஊக்கமும் உங்களிடம் தான் இருக்கிறது என்பதை முழுமையாக நம்பினால் தான் இவை இரண்டும் நீர்வீழ்ச்சி போல தங்கு தடையின்றி உங்களுக்குக் கிடைக்கும்.

• எவர் சொன்னாலும் அதனை அப்படியே நம்பி விடாமல் அதன் உண்மைத் தன்மையை அறிந்து செயல்படவேண்டும்.

• அறிவு உடையவர்கள் வேறொன்றும் இல்லாதவராயினும் எல்லாம் உடையவரே அறிவில்லாதவர் எல்லாமுடையவராயினும் ஒன்றுமில்லாதவரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *