சிந்தனைத் துளிகள்
• நம்முடைய பிள்ளைகளின் பிள்ளைகள் சொல்லட்டும்.
சோதனைகள் முற்றுகை இட்டதால், நம் பயணத்தை நிறுத்தவில்லை.
நாம் புறமுதுகிடவில்லை, இடறவில்லை. அகன்ற வெளியில், குறிக்கோளை நோக்கியே நடந்தோம்.
• சாதாரண மக்கள் எப்போது ஒருங்கிணைகிறார்களோ அல்லது தங்களை நாட்டுடன் ஈடுபத்திக் கொள்கிறார்களோ அன்றுதான் மாற்றங்கள் ஏற்படும்.
• மனிதன் சூரியனாய்ப் பிரகாசிக்க வாய்ப்பிருக்கும்போது ஏன்? மெழுகுவர்த்தியாய் வெளிச்சம் தர வேண்டும்.
• அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்.
• நெஞ்சிலே பாய வரும் ஆயிரம் ஈட்டிகளுக்கு நான் அஞ்சுவதில்லை. ஆனால் ஓர் அறிஞரின் பேனா முனைக்குப் பயப்படுகிறேன்.