சிந்தனைத்துளிகள்
அழகும் ஆடம்பரமும் இருந்தா ஆயிரம் பேர் பழகுவாங்க
அன்பு இருந்தா பழகுற பத்து பேரும் உண்மையாக இருப்பாங்க!
தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள அடுத்தவரை
கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும்
நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது!
நீங்கள் உடைந்து போன அந்த நிமிடங்களே..
உங்களை உருவாக்கிய நிமிடங்கள்..!
முடிவை பற்றி சிந்திக்காதே…
முயற்சியை பற்றி சிந்தி
வானமே உன் வசப்படும்…
புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும்..
அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது..!
சிந்திக்கும் போது நிதானமாக சிந்தியுங்கள்..
செயல்படும் போது உறுதியாக செயல்படுங்கள்..
விட்டுக்கொடுக்கும் போது மனநிறைவுடன் விட்டுக்கொடுங்கள்..!
கடன் – பகை – நோய்
இவை மூன்றும் இல்லாமல்
குடிசையில் வாழ்ந்தாலும்
அவனே மிகப்பெரிய செல்வந்தன்…!