• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

1. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது.

2. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே

3. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார்.

4. ஒரு சிறந்த மொழியானது பெரும்பாலும் எளிய வார்த்தைகளாலேயே உருவாக்கப் படுகின்றது.

5. ஒருவரின் கடமை மற்றவரின் மனதை நிறைசெய்வதாக இருந்தால் அதுவே அதற்கு கிடைத்த பரிசாகும்.

6. இரு இதயங்களின் காதல் ஒரு தெய்வீக தன்மையை உருவாக்குகிறது.

7. பெண்ணைப் பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள், பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி.

8. கோடையில் வியர்வை சிந்தாதவன், குளிர்காலத்தில் உறைந்துபோக கற்றுக்கொள்ள வேண்டும்.

9. நண்பர்களை பெற்றிருக்கும் யாரும் பயனில்லாத மனிதனில்லை.

10. உங்களை நீங்களே மதிப்பது ஆணவம். பிறர் உங்களை மதிப்பது பெருமை!