🏵️துன்பமான சூழ்நிலையில் சிறிது புன்னகை செய்ய கற்றுக்கொண்டால்.. துன்பத்திலிருந்து வெளிவருவதற்கான மனவலிமை கிடைக்கும்.!
🏵️வாழ்க்கை முழுவதும் கவலைகளை சேமித்து வைத்து.. அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.!
🏵️நம்மிடமிருந்து உதிக்கும் வார்த்தைகளும் எண்ணங்களும் அடுத்தவர்களின் வாழ்க்கைக்கு உரமாக இருக்க வேண்டும்.!
🏵️விழுவதும் எழுவதும் எனக்கு புதிதல்ல.. உதிக்கும் சூரியனை போல விழுந்தாலும் மீண்டும் எழுவேன்..!
🏵️நான் தவறி விழுந்தாலும் என்னை தூக்கி விட யாரையும் எதிர்பார்க்கவில்லை.. எனக்குள் ஒருவன் இருக்கிறான்.. அவன் தான் தன்னம்பிக்கை.!
🏵️எதை வீசினாலும் மட்கி அழிக்கும் மண்.. விதையை மட்டும் விருட்சமாக மாற்றுகிறது இதுதான் இயற்கை.!
🏵️வாழ்க்கையில் சில மனிதர்களிடம் கேள்வியையும்.. சில மனிதர்களிடம் பதில்களையும் எதிர்பார்க்காமல் இருப்பது மிகவும் நல்லது.!