எனது மாநிலமான மணிப்பூர் பற்றி எரிகிறது; தயவு கூர்ந்து உதவுங்கள்” – பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் வேண்டுகோள்விடுத்துள்ளார். மெய்டேய் என்ற சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக பெரும் வன்முறை வெடித்து, அங்கு அமைதியின்மை நிலவுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.