சினிமா தோன்றிய காலம் முதல், திரையுலகில் நாயகிகளை விட அதிகம் கோலோச்சிருப்பிவர்கள் நாயகர்களே! அன்று முதல் இன்று வரை நடிகர்களை முன்னிலைபடுத்தும் படங்களே அதிகம் வெளிவந்துள்ளன! அன்றில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரை சிலர், வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது! .
எம்ஜிஆர் : இந்தியாவில் தலைசிறந்த நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் தன்மையுடன் திகழ்ந்தவர் எம் ஜி ராமச்சந்திரன். இவர் ஸ்ரீலங்காவில் வாழ்ந்த மலையாளி குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் தமிழர் இல்லை என்றாலும் தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது!

ரஜினிகாந்த் : தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் ராமோசி ராவ், ரமா பாயிக்கும் நான்காவது மகனாக 1949 இல் பிறந்தார். இவர் ஒரு மராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

விஜயகாந்த் : கேப்டன் விஜயகாந்த் பிறந்து வளர்ந்தது மதுரையில் தான். ஆனால் அவருடைய அப்பா அழகர்சாமி நாயுடு மற்றும் அம்மா ஆண்டாள் இருவரும் தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் விஜயகாந்த் தமிழ் மொழிகளைத் தவிர மற்ற மொழி படங்களில் இதுவரை நடித்தது இல்லை, என்பது குறிப்பிடத்தக்கது!

மோகன் : மைக் மோகன் கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மோகன் ஆரம்பத்தில் கன்னட திரையுலகில் பாலுமகேந்திராவின் கோகிலா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் மூடுபனி படத்தின் மூலம் அறிமுகமானார்! அதன்பின், அவர் நடித்த பல படங்கள் வெள்ளிவிழா கண்டதால் வெள்ளி விழா நாயகன் என அழைக்கப்பட்டார்.

பிரகாஷ்ராஜ் : தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரகாஷ்ராஜ். இவர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் பிறந்தவர். கர்நாடகாவில் இவரை பிரகாஷ்ராய் என்று அழைப்பார்கள். அதன்பின்பு இயக்குனர் கே.பாலச்சந்தரின் ஆலோசனையால் பிரகாஷ்ராஜ் எனப் பெயரை மாற்றிக்கொண்டார்.

அர்ஜுன் சர்ஜா : ஆக்சன் கிங் அர்ஜுன் கர்நாடகாவைச் சேர்ந்த மதுகிரி என்ற இடத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ஜே. சி. ராமசாமி சக்தி பிரசாத் ஒரு புகழ்பெற்ற கன்னட நடிகர் ஆவார். ஆரம்பத்தில் அர்ஜுன் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்தார். அதன்பிறகு அர்ஜுன் நடித்த தமிழ் படங்கள் இவரை மிகப் பிரபலமாக்கியது.
ரகுவரன் : தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பியவர் நடிகர் ரகுவரன். பாட்ஷா படத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இவரை மிகவும் பிரபலமாக்கியது. ரகுவரன் கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்தவர். அதன்பிறகு தந்தையின் தொழில் காரணமாக குடும்பத்துடன் தமிழகத்துக்கு வந்தனர். ரகுவரன் கோவையில்தான் தன் கல்லூரிப் படிப்பை முடித்தார்.
விஷால் : தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஷால். செல்லமே, சண்டக்கோழி, திமிரு போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவர் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தாலும் இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கிய ஜி கே ரெட்டி விஷாலின் தந்தையாவார்.


- பள்ளி குறித்த திட்டங்களுக்கு தமிழில் பெயர்… முதல்வர் பேச்சுதமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை […]
- யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சிறுவனுக்கு நூதுன தண்டனை..உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது […]
- ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன் -அண்ணாமலை டூவிட்பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை […]
- மதுரை – தேனி புதிய அகல ரயில்பாதை திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.மதுரை தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில் பாதை திட்டம் – பிரதமர் […]
- தும்பை விட்டு வாலைப்பிடிக்கிறார் ஸ்டாலின் -செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டுதும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று கச்சத்தீவை விற்றது கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் தற்போது […]
- போக்சோ தண்டனையில் விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைதுஜெயங்கொண்டம் அருகே போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது […]
- கழுத்து கருமை நீங்க:சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து […]
- டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் ஆகவில்லையென்றால் இதுதான் சம்பிரதாயமாம்…இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. […]
- முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு:தேவையானவை:கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு […]
- கலைஞர் கருணாநிதி திரு உருவ சிலை திறக்கப்படும் நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்… ஸ்டாலின் நெகிழ்ச்சிசென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை […]
- தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது- மோடி பெருமிதம்பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை தமிழ் மொழி நிலையானது,அதன் கலாச்சாரம் உலகளாவியது என […]
- ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் துவக்கி வைத்தார்தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் […]
- இதுதான் திராவிட மாடல் -மோடியின் முன்பு ஸ்டாலின் பேச்சுபல்வேறு திட்டங்களை துவக்கிவைக்க பிரதமர் மோடி தமிழக வந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடமாடல் குறித்த […]
- சிந்தனைத் துளிகள்• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். […]
- பொது அறிவு வினா விடைகள்1.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சுவீடன்2.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 113.உலக […]