சினிமா தோன்றிய காலம் முதல், திரையுலகில் நாயகிகளை விட அதிகம் கோலோச்சிருப்பிவர்கள் நாயகர்களே! அன்று முதல் இன்று வரை நடிகர்களை முன்னிலைபடுத்தும் படங்களே அதிகம் வெளிவந்துள்ளன! அன்றில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரை சிலர், வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது! .
எம்ஜிஆர் : இந்தியாவில் தலைசிறந்த நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் தன்மையுடன் திகழ்ந்தவர் எம் ஜி ராமச்சந்திரன். இவர் ஸ்ரீலங்காவில் வாழ்ந்த மலையாளி குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் தமிழர் இல்லை என்றாலும் தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது!

ரஜினிகாந்த் : தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் ராமோசி ராவ், ரமா பாயிக்கும் நான்காவது மகனாக 1949 இல் பிறந்தார். இவர் ஒரு மராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

விஜயகாந்த் : கேப்டன் விஜயகாந்த் பிறந்து வளர்ந்தது மதுரையில் தான். ஆனால் அவருடைய அப்பா அழகர்சாமி நாயுடு மற்றும் அம்மா ஆண்டாள் இருவரும் தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் விஜயகாந்த் தமிழ் மொழிகளைத் தவிர மற்ற மொழி படங்களில் இதுவரை நடித்தது இல்லை, என்பது குறிப்பிடத்தக்கது!

மோகன் : மைக் மோகன் கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மோகன் ஆரம்பத்தில் கன்னட திரையுலகில் பாலுமகேந்திராவின் கோகிலா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் மூடுபனி படத்தின் மூலம் அறிமுகமானார்! அதன்பின், அவர் நடித்த பல படங்கள் வெள்ளிவிழா கண்டதால் வெள்ளி விழா நாயகன் என அழைக்கப்பட்டார்.

பிரகாஷ்ராஜ் : தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரகாஷ்ராஜ். இவர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் பிறந்தவர். கர்நாடகாவில் இவரை பிரகாஷ்ராய் என்று அழைப்பார்கள். அதன்பின்பு இயக்குனர் கே.பாலச்சந்தரின் ஆலோசனையால் பிரகாஷ்ராஜ் எனப் பெயரை மாற்றிக்கொண்டார்.

அர்ஜுன் சர்ஜா : ஆக்சன் கிங் அர்ஜுன் கர்நாடகாவைச் சேர்ந்த மதுகிரி என்ற இடத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ஜே. சி. ராமசாமி சக்தி பிரசாத் ஒரு புகழ்பெற்ற கன்னட நடிகர் ஆவார். ஆரம்பத்தில் அர்ஜுன் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்தார். அதன்பிறகு அர்ஜுன் நடித்த தமிழ் படங்கள் இவரை மிகப் பிரபலமாக்கியது.
ரகுவரன் : தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பியவர் நடிகர் ரகுவரன். பாட்ஷா படத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இவரை மிகவும் பிரபலமாக்கியது. ரகுவரன் கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்தவர். அதன்பிறகு தந்தையின் தொழில் காரணமாக குடும்பத்துடன் தமிழகத்துக்கு வந்தனர். ரகுவரன் கோவையில்தான் தன் கல்லூரிப் படிப்பை முடித்தார்.
விஷால் : தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஷால். செல்லமே, சண்டக்கோழி, திமிரு போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவர் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தாலும் இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கிய ஜி கே ரெட்டி விஷாலின் தந்தையாவார்.


- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]