முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், கே பி முனுசாமி, வைத்திலிங்கம் என அதிமுக முக்கிய தலைவர்கள் புழல் சிறைக்கு சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் போது 49 ஆவது வார்டுக்குள்பட்ட தண்டையார்பேட்டையில் ஒரு வாக்குச் சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து கள்ளஓட்டு போட்டதாக நரேஷ் என்ற திமுக பிரமுகரை அதிமுகவினர் தாக்கியுள்ளனர். இதை அறிந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அங்கு சென்று அதிமுகவினரை விலக்கிவிட்டு அந்த நபரை மீட்டுள்ளார்.
மேலும் அவரின் சட்டையை கழற்றி ஜெயக்குமாரே அந்த நபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து வீடியோ ஜெயக்குமாரின் பேஸ்புக் பக்கத்திலும் வெளியானது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட திமுக பிரமுகர் நரேஷ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தாக்கியதாக 40 பேர் மீது புகார் கொடுத்தார்.
அதன் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் வரும் மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் எடப்படாடி பழனிச்சாமி ஜெயக்குமாரை சந்திக்க புழல் சிறைக்கு சென்றார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியும் சென்றிருந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் பெஞ்சமினும் சென்றிருந்தார்.
ஜெயக்குமாரை வீடு புகுந்து கைது செய்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை போய் சந்தித்ததால் புழல் சிறையில் பரபரப்பு எழுந்தது. இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் இன்று காலை புழல் சிறைக்கு சென்றார்.
அவருடன் வைத்திலிங்கம், கே பி முனுசாமி உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர். கடந்த 24 ஆம் தேதி அதிமுகவின் இரட்டை தலைமைகளில் ஒருவர் சென்றுவிட்ட நிலையில் இன்று மற்றொரு தலைமையும் சந்தித்துவிட்டார். வரும் 7 ஆம் தேதி ஜெயக்குமார் வழக்கு விசாரணைக்கு வரும் போது அவர் விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது. மேலும் ஜெயக்குமாரை விடுவிப்பதற்காக அதிமுக சார்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முடித்து கொண்டு ஓபிஎஸ்ஸிடம் சொல்லாமல் கொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்பி வேலுமணியை அழைத்து கொண்டு புழல் சிறையில் உள்ள ஜெயக்குமாரை சந்தித்து பேசியுள்ளார். இது ஓபிஎஸ்ஸுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது தன்னுடன் இருந்து கொண்டு தன்னை அழைத்து செல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி புழலுக்கு போனதை அடுத்து இன்று ஓபிஎஸ் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூட அதிமுகவில் சரியான தலைமை இல்லை என்று அதிருப்தி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த ஒற்றை தலைமை விவகாரம் தற்போது அதிமுகவில் மீண்டும் தலை தூக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த முறை தேர்தலின் போது முதல்வர் வேட்பாளர் அறிவிப்பின் போது ஓபிஎஸ் தர்ம யுத்தம் 2.0 ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் சரவெடி திடீரென்று புஸ்வாணமாகி போனது.அதுபோல தான் இந்த முறையும் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]