தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் முன்னாள் முதல்வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவருமாகிய டாக்டர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டிபட்டி -வைகை அணை ரோடு பகுதியிலுள்ள எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பரவீந்திரநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், மேலும் இந்நிகழ்வில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கதவசி, தேனி மாவட்டசெயலாளர் SPM. சையதுகான், துணைச் செயலாளர் முறுக்கோடை ராமர் , ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் A. லோகிராஜன், ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் TRN.வரதராஜன் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.