ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ் ஓபிஎஸ் இரண்டு அணிகளும் தனித்தனியே களம் இறங்கி உள்ளனர். முன்னாள் எம்எல்ஏ தென்னரசு தங்கள் அணி வேட்பாளராக அறிவித்தார் இபிஎஸ். அதை தொடர்ந்து ஓபிஎஸ் தன் அணி சார்பாக செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.
இபிஎஸ் அறிவித்துள்ள வேட்பாளர் தென்னரசு பற்றி இரண்டு அணிகளுக்குமே நன்றாக தெரியும். இபிஎஸ் குரூப்பில் இரட்டை இலை சின்னம் ஒன்றுதான் எதிர்பார்ப்பு ஆனால் ஓபிஎஸ் குரூப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் யார் என்று அண்ணா திமுகவில் ஒரு தொண்டனுக்கும் தெரியாது. ஒன்னாம் தேதி மாலை ஓபிஎஸ் வேட்பாளரை சென்னையில் இருந்து அறிவித்தார்
அப்பொழுது தான் தெரியும் செந்தில் முருகன் என்று ஒரு நபர் இருக்கிறார் அப்போதுதான் எல்லோரும் தெரியவந்தது யார் இந்த செந்தில் முருகன் என்று ஆளாளுக்கு கேட்டுக் கொண்டனர். பத்திரிகை மற்றும் மீடியா குரூப் அனைவரும் வேட்பாளர் யார் என்று சல்லடை போட்டு தேடினர். யாரிடமும் உடனடியாக செந்தில்முருகன் பற்றி பயோடேட்டாவும் போட்டோவும் உடனே கிடைக்கவில்லை சுமார் ஒரு மணி நேரம் கழித்து தான் அவர் பற்றி விவரமாக வெளிவந்தது முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் கட்சியில் எந்த பொறுப்பும் இல்லை வெறும் அடிப்படை உறுப்பினர் தகுதியோடு மட்டும் அவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவ்வளவு ஏன் ஓபிஎஸ் அறிவிக்கும் போது கூட செந்தில் முருகன் என்பவர் வேட்பாளர் என்று தான் கூறுகிறார் அதாவது அதிமுகவில் யாருக்கும் அவரை தெரியாது என்று அவரே உணர்ந்து என்பவர் வேட்பாளர் என்று கூறுகிறார்
ஓபிஎஸ் அணியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் மீது அனைவரும் பெரும் எதிர்ப்பை காட்டி வருகின்றனர் இதனால் வரை ஓபிஎஸ் அணியில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் முருகானந்தம் நிறுத்தப்படுவார் என்று பேசப்பட்டு வந்தது அல்லது துணை செயலாளர் கார்த்திக் நிறுத்தப்படுவார் என்று அலசப்பட்டது திடீர் திருப்பமாக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டவுடன் ஓ பி எஸ் அணி நிர்வாகிகள் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்ததுடன் பேசாமல் இருந்து விட்டனர்
ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகானந்தம் வேட்பாளராக இல்லை என்றதும் அந்த அணியை சேர்ந்த அனைவரும் அப்செட் ஆகினர் முருகானந்தமும் சைலன்ட் ஆகிவிட்டார் யார் செந்தில் முருகன் அவர் எப்படி வந்தார் என்று இரவு முழுவதும் தீவிரப்புலன் விசாரணை இறக்கி உள்ளனர் ஓபிஎஸ் அணியினர் இன்று விடியற்காலை அவர்களுக்கு அதற்கான ரிசல்ட் கிடைத்துவிட்டது
வேட்பாளர் செந்தில் முருகன் ஓபிஎஸ் வாரிசு ரவீந்திரனுடன் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ஒன்றாக படித்தவர்களாம். ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் கடைசி நேரத்தில் இபிஎஸ் அணி எதிர்ப்பாராதமாக ஓபிஎஸ் வேட்பாளரை விலைக்கு வாங்கி விட்டால் என்ன செய்வது என்று முன் ஜாக்கிரதையாக தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவர் வேட்பாளராக இருந்தால் தான் சாத்தியம் என்று ஓபிசி வாரிசுகள் முடிவெடுத்து தங்கள் கல்லூரி நண்பரே வேட்பாளராக அறிவித்தார்கள் என்கிறார்கள் எல்லோரும் வேட்பாளருக்கு தான் டம்மி வேட்பாளர் போடுவார்கள் ஆனால் ஓபிஎஸ் வேட்பாளரையே டம்மியாக அறிவித்திருப்பது அந்த அணிகள் நிர்வாகிகள் எரிச்சல் அடைந்துள்ளனர் அது மட்டும் அல்ல இந்த வேட்பாளர் செலவு செய்வதற்கு வசதி இல்லை பதிலாக ஈரோடு சோலார் பகுதியில் இயங்கி வரும் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் காண்ட்ராக்டர் ஒருவர் ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் டர்ன் ஓவர் செய்து வருகிறாராம் அவரும் ஓபிஎஸ் வாரிசுகளின் கல்லூரி தோழராம் ஆக கல்லூரி தோழர்கள் குரூப் ஒன்று வேட்பாளர் தேர்வில் மும்முரமாக இருக்கிறது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டேன் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கொதித்துப் போயிருக்கின்றனர் என்கிறார்கள் ஈரோடு மாவட்டத்தில் அதிமுக கட்சியில் அவர் அணியில் இவ்வளவு காலம் அரசியல் செய்தது கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது ஆனால் யார் என்று தெரியாமல் ஒருவர் வேட்பாளராக அறிவித்தது ஓபிஎஸ் இன் சரிவு காலம் ஆரம்பம் ஆகிவிட்டது என்கிறார்கள் அவர் அணியை சேர்ந்தவர்களே. அனேகமாக வேட்பாளர் வாபஸ் பெரும் கடைசி நாள் வரை கூட செந்தில் முருகன் மாற்றப்பட வாய்ப்பு இருக்குமா என்று கொஞ்சம் ஓவராக தான் எதிர்பார்த்திருக்கிறார்கள் நிர்வாகிகள்.
- ராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா..!
- பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அறுபடை […]
- கோவில்பட்டியில் ஆட்டோக்களுடன் போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்..!தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்படும் மினிபேருந்துகள் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது […]
- சோழவந்தான் அருகே புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்சோழவந்தான் அருகே காடுபட்டியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டியில் […]
- ஓபிஎஸ் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என அறிவிப்புஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் […]
- உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை.., விபத்து ஏற்படும் அபாயம்..!காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி […]
- தேர்வு முறைகேடுகள்-டிஎன்பிஎஸ்சி ஆலோசனை தொடங்கியதுகுரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் […]
- நாகர்கோவிலில் மாணிக்கக் கற்கள் எனக் கூறி.., பெண்களை ஏமாற்றிய பூசாரிகள் மீது வழக்கு..!நாகர்கோவிலில் மாணிக்கக்கற்கள் எனக் கூறி பெண்களை ஏமாற்றிய இரண்டு பூசாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, […]
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 148: வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் […]
- சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மதுரை […]
- பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து தங்க நகைகள் வாங்கிய திருடன்மதுரை வாடிப்பட்டியில் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம டூப்ளிகேட் ஏடிஎம் கார்டை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் மனநிறைவு… மனநிறைவு… நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்கு பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் […]
- அதானி விவகாரம்- 12வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்அதானி விவகாரத்தை விவாதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து 12 வது […]
- பொது அறிவு வினா விடைகள்
- கர்நாடகாவில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையும் நிலையில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வமாக […]