மதுரையில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பல்வேறு அமைப்பினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் மாநில துணை தலைவர் முத்துராமலிங்கம், வைகை பத்மநாபன், நாகராஜ் தேவர், செல்வராஜ் , சாலை பிரபாகரன், ராமசாமி, முனியாண்டி, சேகர், வேல்முருகன் பாலகிருஷ்ணன் மற்றும் மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் சமூக ஆர்வலர்கள் பல மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.