தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். அடிக்கடி ஏற்படும் வாகன நெரிசலால் பெரும் விபத்து ஏற்படும் முன், இங்கு ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி மாவட்டம், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பழைய பஸ் ஸ்டாண்ட். ஒரு காலத்தில் காமராஜர் பஸ் நிலையம் என்றழைக்கப்பட்டது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு சொந்தமான இந்த பஸ் ஸ்டாண்டில் 40க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் நகராட்சிக்கு வருவாய் கிடைத்து வருகிறது. வருவாயை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்டின் அவலநிலை குறித்து கவலைப்படுவதில்லை.
மூன்று ஏக்கருக்கும் அதிகமாக பரந்து, விரிந்து காணப்பட்ட பஸ் ஸ்டாண்ட், காலப்போக்கில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சுருங்கி காணப்படுகிறது. தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து போடி, மூணாறு, வீரபாண்டி, சின்னமனூர், கம்பம், குமுளி, போன்ற பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பெரும்பாலான டவுன், விரைவு பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றன. இதனால் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் இங்கு அதிகரித்து வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில் கடை நடத்தி வருபவர்கள், தங்கள் இஷ்டம் போல் கடைக்கு முன்பாக ‘ஷெட்’ (கூடாரம்) அமைத்துள்ளதால் பயணிகள் நிற்க கூட வசதி இல்லாமல் வெயிலில் காத்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதவிர பஸ் வெளியே செல்லும் இடத்தில் நடை பாதை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு ரோட்டின் ஓரத்தில் தள்ளுவண்டிகளை வரிசையாக நிறுத்தி பழக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதில் சிக்கல் ஏற்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை இல்லை என புலம்பி வருகின்றனர். காரணம், நகராட்சி அதிகாரிகளை நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் சாலையோர தள்ளுவண்டி கடைக்காரர்கள் அவ்வபோது ‘மாமூல்’ கொடுத்து சரிகட்டி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எது எப்படியோ, பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பெரும் விபத்து தவிர்க்கப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]