• Fri. Mar 29th, 2024

வடகொரியாவில் வீடு வீடாக சென்று கையெழுத்து கேட்கும் அதிகாரிகள்

வடகொரியாவில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று மக்களின் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 23-ஆம் தேதி வடகொரியாவில் உள்ள பியாங்சோன் என்ற மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர்களில் அதிபர் கிம் ஜாங் உன் பற்றி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோசமான தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் சில வார்த்தைகளை எழுதியிருந்தார்.

அதாவது “அதிபர் கிம் ஜாங் உன்னால் மக்கள் பட்டினியில் செத்து மடிகிறார்கள்” என்று சுவரில் எழுதியுள்ளார். ஆனால் அதனை எழுதியது யார் ? என்பது தெரியாத நிலையில் வட கொரிய அதிகாரிகள் வீடு வீடாக சென்று மக்களின் கையெழுத்து மாதிரிகளை சேகரித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எழுதியது யார் என்பது உறுதியாகும் பட்சத்தில், தண்டனை என்னவாக இருக்கும் என்று வடகொரிய மக்கள் அச்சத்தில் உள்ளனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *