• Mon. Apr 29th, 2024

இனி சிபிஐ-யிடமும் மக்கள் கேள்வி கேட்கலாம் : உயர்நீதிமன்றம் அதிரடி

Byவிஷா

Feb 5, 2024

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சிபிஐ-யிடம் விண்ணப்பித்தாலும், அதற்கு சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
சிபிஐ தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து சிபிஐக்கு முழுமையாக விளக்க அளிக்கப்படவில்லை எனவும் ஊழல் மற்றும் உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை மக்கள் கேட்டால் அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சிபிஐ இடம் விண்ணப்பித்தாலும் குறிப்பிட்ட சில தகவல்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *