வணிகர்களை குறி வைத்து இந்திய இராணுவத்தினர் என கூறி தொலைபேசி மூலமாக பேசி நூதன முறையில் டேட்டாக்களை திருடி பணம் பறிக்க முயன்ற வடமாநில கும்பல்.
மதுரையில் வணிகர்களை குறிவைத்து தற்போது வடமாநில கும்பல் ஒன்று நூதன முறையில் கொள்ளையடிக்க தொடங்கியுள்ளது. இந்த கும்பல் தற்போது மதுரையில் செயல்பட்டு வரும் முன்னணி வணிக நிறுவனங்களை தொடர்பு கொண்டு நாங்கள் மதுரையில் செயல்படும் இந்திய ராணுவ கிளையிலிருந்து பேசுவதாக கூறி அவ்வப்போது ஏமாற்றி வருகிறது.
இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்படும் தனியார் வாகன டயர் விற்பணை நிலையத்தில் தொடர்பு கொண்ட மர்ம கும்பல் டயர் விற்பனை நிலையத்தின் ஊழியர்களிடம் பேசும்போது தங்களது இராணுவ வாகனங்களுக்கு டயர் தேவைப்படுவதாகவும் அவற்றை தாங்கள் கூறும் இடத்திற்கு கொண்டு வந்து கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என இந்தியில் பேசுகின்றனர்.






இந்தியில் பேசும் அந்த கும்பல் வாட்ஸ்அப் எண் மூலம் தங்களுக்கு இந்த சைஸ் டயர் தேவைப்படுகிறது என கூறிய கும்பல் பணத்தை நாளை மதுரை விமான நிலைய ராணுவ கட்டுப்பாட்டு மையத்திற்கு பொருளை ஒப்படைத்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறி மதுரை விமானநிலையம் முகப்பு வைக்கப்பட்ட ஒரு லிங்கை whatsapp க்கு அனுப்பி உள்ளனர். அவர்களது பேச்சில் சந்தேகம் அடைந்த அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அவர்களிடம் பேசுவதை தவிர்த்து உள்ளனர்.
தொடர்ந்து அந்நிறுவனத்தின் பல கிளைக்கு மீண்டும் அந்த வடநாட்டு கும்பல் தொடர்பு கொண்டு தங்களது ராணுவ வாகனங்களுக்கு டயர் தேவைப்படுவதாக கூறி., மீண்டும் தொல்லை கொடுத்துள்ளது. அடுத்த சில நிமிடங்களிலே டயர் கடை உரிமையாளருக்கு அதே நபர் போன் செய்து டயர் தேவைப்படுகிறது., நாளை காலை மதுரை விமானநிலைய ராணுவ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். தங்களது வாட்ஸ் அப்பிற்கு ஒரு லிங்கை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மேலாளரும்., உரிமையாளரும் இது போலியானது என உறுதி செய்தனர்.
அந்நிறுவனம் உடனடியாக விமானநிலையத்தில் உள்ள காவலர்களுக்கு தொடர்புகொண்டு இதுபோன்ற நபர் யாரும் இருக்கிறார்களா.? என விசாரித்துள்ளனர். மேலும்., முன்னாள் ராணுவத்தினரிடம் அவர்கள் கேட்ட பொழுது எந்த ஒரு பொருளையும் இந்திய ராணுவம் தனி நபர்களிடம் வாங்காது எனவும்., அப்படி வாங்க வேண்டும் என்றால் டெண்டர் முறையில் பொருட்களை கொள்முதல் செய்ய மட்டுமே அனுமதி உள்ளது. தொடர்ந்து., ராணுவத்திற்கு என சலுகைகள் பல உள்ளது. அதனால் நேரடியாக எந்த ஒரு ராணுவ அதிகாரியும் இதுபோன்று அழைப்பை கொடுக்க மாட்டார்கள் என தெரிவித்ததாக கூறுகின்றனர்.
அந்த கும்பல் அனுப்பும் லிங்கை ஓபன் செய்தால் வணிகநிறுவனத்தின் உரிமையாளர்களின் தொலைபேசியில் உள்ள வங்கி விவரங்கள் உள்ளிட்ட அனைத்து டேட்டாக்களும் திருடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே., வணிகர்கள் இதுபோன்று யாரேனும் அழைத்தால் அவர்கள் அனுப்பும் லிங்குகளை ஓபன் செய்யாமல் உடனடியாக அறிய உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் ஏமாற்றும் வட மாநில கும்பல் தற்போது நூதன முறையில் மதுரையைச் சேர்ந்த வணிகர்களின் பணத்தை திருடுவதற்கு இந்திய ராணுவத்தை பயன்படுத்தி திட்டம் திட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]