புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்ட அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கே தெரியும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்துள்ளது, ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூடும் என இபிஎஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர். ஆனால் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். இப்படி கட்சியே களேபரபட்டு நிற்கும் நிலையில், இபிஎஸ் ஆதரவாளர் வளர்மதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது..,
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதித்த பிறகுதான் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் பொதுக்குழுவை நடத்த கூடாது என அதிமுகவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பினர் வழக்கு தொடுத்தனர். இதேபோல் தேர்தல் ஆணையத்திடம் இன்று முறையிட்டுள்ளதாக தெரிகிறது. மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்ற நாள் முதல் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு பதியப்பட்டு வருகிறது.
எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றார். அப்போது திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போவார்கள் என ஸ்டாலின் பேசியிருக்கிறார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது அவருக்கே தெரியும்.. எம்ஜிஆர் கண்ட அதிமுக என்ற இயக்கத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது, அது முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும் என்றார். ஓ.பன்னீர் செல்வத்தை யாரோ பின்னிருந்து இயக்குகிறார்களா என்ற கேள்விக்கு,
அதை ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் கேட்க வேண்டும் என கூறிய அவர், தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்தையும் நீதி அரசர்களின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம், ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் பெற்றுத்தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆனால் பொதுக்குழு தீர்மானத்தில் இல்லாத ஒன்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று ஓபிஎஸ் தான் கூறுகிறார். இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]