• Fri. Apr 26th, 2024

நீலகிரி மாவட்ட தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நீலகிரி மாவட்ட அரசு தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பணிவரன் ,கால முறை ஊதியம் , பணிக்கொடை , ஓய்வூதியம் , பணப்பலன்கள் , கல்விதகுதிக்கான பதவி உயர்வு ,10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஊக்க ஊதியஉயர்வு , தற்காலிக பணியாளர் களுக்கு பணி நிரந்தரம் , மாவட்ட கலெக்டர் நிர்ணயம் செய்யும் குறைந்தபட்சம் ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் நீலகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் போஜராஜன் தலைமையில் இன்று இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டதை தொடர்ந்துள்ளனர். ஏ ஐ டி யு சி அமைப்பு சாரா தொழிலாளர் சங்க அமைப்பாளர் ராஜு , சமூக ஆர்வலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம் , படுக தேச பார்ட்டி நிறுவனர் தலைவர் மஞ்சை வி.மோகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அரசு தாவரவியல் பூங்கா பராமரிப்பு பணிகள் 3நாளாக பாதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *