கைகளில் ஓலையும் எழுதுகோலும் ஏந்தி சம்மணமிட்டு அமர்ந்து தமிழ்ச் சமூகத்தை நோக்கும் திருவள்ளுவரின் உருவ ஓவியமே, தமிழரின் மனங்களில் திருவள்ளுவராகப் பதிவாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில், பல்வேறு கோணங்களில் திருவள்ளுவரைக் காணும் முன்னெடுப்பை பில்ரோத் மருத்துவமனை சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டது. பெஷ்வா கிரியேட்டிவ் நிறுவனத்தின், கிரியேட்டிவ் இயக்குநராகச் செயல்படும் ஸ்ரீ பிரகாஷின் மனதில் தோன்றிய இந்த யோசனைக்கு வடிவம் கொடுத்திருப்பவர் ஓவியர் கோபி ஓவிஎன்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது திருக்குறள். ஆனால், இன்றும் நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் திருக்குறளின் கருத்துகள் நீங்காத இடம்பெற்றிருக்கின்றன. அந்தக் குறள்களை இயற்றிய வள்ளுவருக்கு, இதுவரை நாம் பார்த்துவந்த உருவத்திலிருந்து மாறுபட்டு புதுமையான உருவம் கொடுக்க விரும்பினேன். என் கற்பனையின் மூலம் உருவம், உடலமைப்பு, முகபாவனைகள் கொடுத்து உயிர் கொடுக்க நினைத்து உருவாக்கிய இந்தப் படைப்புகள் 2016ஆம் ஆண்டு பல இன்னல்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டவை” என்று இத்திட்டத்தின் தொடக்கம் குறித்து விளக்குகிறார் ஸ்ரீ பிரகாஷ்.
இத்திட்டத்துக்கு முழுமையான நிதியுதவியை பில்ரோத் மருத்துவமனை வழங்கியது. ஓவியர் கோபி ஓவிஎன் வரைகலையில் உயிர்ப் பெற்ற திருவள்ளுவர் ஓவியங்கள் தாங்கிய நாள்காட்டி ஒன்றை வெளியிட 2017-ல் திட்டமிட்டோம். மிகப்பெரிய திட்டம் ஒன்றின் தொடக்கமாக இது அமைந்தது, என்று ஸ்ரீ பிரகாஷ் உற்சாகமாகப் பேசுகிறார்.ஆனால், திட்டமிட்டபடி நாள்காட்டி வெளியாகவில்லை. இந்நிலையில், ஓவியங்கள் பொதுவெளிக்குக் கசிந்து பொதுமக்கள் பயன்பாட்டையும் தாண்டி, சிலரால் வணிகப் பயன்பாட்டிலும் கொண்டுவரப்பட்டிருப்பது சில நாள்களுக்கு முன்பு ஸ்ரீ பிரகாஷின் கவனத்துக்கு வந்திருக்கிறது.
25 படங்கள் வரைந்து அதிலிருந்து 12 படங்களை நாள்காட்டிக்காகத் தேர்வு செய்தோம். அந்தப் படங்கள் எப்படி வெளியே கசிந்தன என்று தெரியவில்லை. வள்ளுவரும் அவரின் படைப்பான திருக்குறளும் இக்காலத்தினருக்கு இன்னும் சிறந்த முறையில் கொண்டு சேர்க்கும் முயற்சிக்குத் தடை விளைவிக்கும் எண்ணத்தில் சிலர் என் படைப்புகளை இணையத்தில் கசியச் செய்தார்கள். இன்று பல தளங்களில் இந்தப் படங்கள் உலா வருகின்றன.
அனுமதியின்றி வணிகப் பொருளாகவும் சிலரால் இது விற்பனை செய்யப்படுகிறது.வள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் நான் செய்ய நினைக்கும் தொண்டினை யாராலும் தடுக்க முடியாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் படைப்புகளை நானே வெளியிடுகிறேன். பில்ரோத் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் ராஜேஷ் ஜெகநாதத் இந்தப் படைப்புகளின் உரிமையைத் தாங்கியிருக்க, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குகிறோம். ஆனால், எக்காரணம் கொண்டும் வணிக நோக்கத்துக்காக இந்தப் படங்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்,” என்கிறார் தீர்மானமாகதிருவள்ளுவர் ஓவியங்கள் அடங்கிய நாள்காட்டியைத் தொடக்கமாகக் கொண்டு நிறைய விஷயங்கள் பெரிதாகத் திட்டமிட்டிருக்கிறோம். இது ஆரம்பம்தான்; அடுத்த ஆண்டு இதே நாளில் நாங்கள் திட்டமிட்டிருக்கும் விஷயங்கள் கண்டிப்பாக நடந்திருக்கும்” நம்பிக்கையோடு புன்னகைக்கிறார் ஸ்ரீ பிரகாஷ்.
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]