• Sat. Apr 20th, 2024

திருவள்ளுவருக்கு புதிய வடிவம் மருத்துவமனை புதிய முயற்சி

கைகளில் ஓலையும் எழுதுகோலும் ஏந்தி சம்மணமிட்டு அமர்ந்து தமிழ்ச் சமூகத்தை நோக்கும் திருவள்ளுவரின் உருவ ஓவியமே, தமிழரின் மனங்களில் திருவள்ளுவராகப் பதிவாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில், பல்வேறு கோணங்களில் திருவள்ளுவரைக் காணும் முன்னெடுப்பை பில்ரோத் மருத்துவமனை சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டது. பெஷ்வா கிரியேட்டிவ் நிறுவனத்தின், கிரியேட்டிவ் இயக்குநராகச் செயல்படும் ஸ்ரீ பிரகாஷின் மனதில் தோன்றிய இந்த யோசனைக்கு வடிவம் கொடுத்திருப்பவர் ஓவியர் கோபி ஓவிஎன்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது திருக்குறள். ஆனால், இன்றும் நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் திருக்குறளின் கருத்துகள் நீங்காத இடம்பெற்றிருக்கின்றன. அந்தக் குறள்களை இயற்றிய வள்ளுவருக்கு, இதுவரை நாம் பார்த்துவந்த உருவத்திலிருந்து மாறுபட்டு புதுமையான உருவம் கொடுக்க விரும்பினேன். என் கற்பனையின் மூலம் உருவம், உடலமைப்பு, முகபாவனைகள் கொடுத்து உயிர் கொடுக்க நினைத்து உருவாக்கிய இந்தப் படைப்புகள் 2016ஆம் ஆண்டு பல இன்னல்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டவை” என்று இத்திட்டத்தின் தொடக்கம் குறித்து விளக்குகிறார் ஸ்ரீ பிரகாஷ்.

இத்திட்டத்துக்கு முழுமையான நிதியுதவியை பில்ரோத் மருத்துவமனை வழங்கியது. ஓவியர் கோபி ஓவிஎன் வரைகலையில் உயிர்ப் பெற்ற திருவள்ளுவர் ஓவியங்கள் தாங்கிய நாள்காட்டி ஒன்றை வெளியிட 2017-ல் திட்டமிட்டோம். மிகப்பெரிய திட்டம் ஒன்றின் தொடக்கமாக இது அமைந்தது, என்று ஸ்ரீ பிரகாஷ் உற்சாகமாகப் பேசுகிறார்.ஆனால், திட்டமிட்டபடி நாள்காட்டி வெளியாகவில்லை. இந்நிலையில், ஓவியங்கள் பொதுவெளிக்குக் கசிந்து பொதுமக்கள் பயன்பாட்டையும் தாண்டி, சிலரால் வணிகப் பயன்பாட்டிலும் கொண்டுவரப்பட்டிருப்பது சில நாள்களுக்கு முன்பு ஸ்ரீ பிரகாஷின் கவனத்துக்கு வந்திருக்கிறது.

25 படங்கள் வரைந்து அதிலிருந்து 12 படங்களை நாள்காட்டிக்காகத் தேர்வு செய்தோம். அந்தப் படங்கள் எப்படி வெளியே கசிந்தன என்று தெரியவில்லை. வள்ளுவரும் அவரின் படைப்பான திருக்குறளும் இக்காலத்தினருக்கு இன்னும் சிறந்த முறையில் கொண்டு சேர்க்கும் முயற்சிக்குத் தடை விளைவிக்கும் எண்ணத்தில் சிலர் என் படைப்புகளை இணையத்தில் கசியச் செய்தார்கள். இன்று பல தளங்களில் இந்தப் படங்கள் உலா வருகின்றன.

அனுமதியின்றி வணிகப் பொருளாகவும் சிலரால் இது விற்பனை செய்யப்படுகிறது.வள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் நான் செய்ய நினைக்கும் தொண்டினை யாராலும் தடுக்க முடியாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் படைப்புகளை நானே வெளியிடுகிறேன். பில்ரோத் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் ராஜேஷ் ஜெகநாதத் இந்தப் படைப்புகளின் உரிமையைத் தாங்கியிருக்க, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குகிறோம். ஆனால், எக்காரணம் கொண்டும் வணிக நோக்கத்துக்காக இந்தப் படங்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்,” என்கிறார் தீர்மானமாகதிருவள்ளுவர் ஓவியங்கள் அடங்கிய நாள்காட்டியைத் தொடக்கமாகக் கொண்டு நிறைய விஷயங்கள் பெரிதாகத் திட்டமிட்டிருக்கிறோம். இது ஆரம்பம்தான்; அடுத்த ஆண்டு இதே நாளில் நாங்கள் திட்டமிட்டிருக்கும் விஷயங்கள் கண்டிப்பாக நடந்திருக்கும்” நம்பிக்கையோடு புன்னகைக்கிறார் ஸ்ரீ பிரகாஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *