நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்…….தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான ஐயா பழ. நெடுமாறன் அவர்களும் தமிழீழப் பாவலர் ஐயா காசி. ஆனந்தன் அவர்களும் நேற்று (13.2.2023) தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி “தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாகவும், அவர் துணைவியார் மதிவதனி அவர்களும் மகள் துவாரகா அவர்களும் உயிருடன் இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
“தமிழ் ஈழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்க இருக்கிறார். தமிழ் ஈழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.“தலைமறைவிலிருந்து” வெளி வந்து தமிழீழ விடுதலை இயக்கத்தைத் தொடங்க இருக்கும் மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கட்கு, அவரது இந்த இலட்சியத் திட்டத்தை வெளியிட சொந்த அமைப்பு இல்லாமலா இருக்கும்?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்ட காலத்திலும், அது செயல்படாத பிற்காலத்திலும் அந்த அமைப்பின் சார்பில் கருத்துகள் – நிலைபாடுகள் – முடிவுகள் முதலியவற்றை வெளியிடும் அதிகாரத்தை இவ்விருவருக்கும் அவ்வமைப்பு வழங்கியதில்லை.கவிஞர் காசி ஆனந்தன் ஆர்.எஸ்.எஸ்., பாசகவின் ஆரியத்துவா, அதாவது அவர்களின் இந்துத்துவா கொள்கையை ஆதரித்து, பாசக ஆட்சியின் ஆதரவைப் பெற்று தமிழீழத் தமிழர்களின் அரசியல், இறையாண்மை மற்றும் உரிமைகளை மீட்கப் போவதாக அறிவித்துச் செயல்பட்டு வருபவர். கவிஞரின் இந்நிலைபாட்டை எள்ளளவும் ஆதரிக்காத தமிழ்நாட்டு தமிழீழ ஆதரவு அமைப்புகள் பல உள்ளன. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கவிஞரின் இந்நிலைபாட்டைத் தொடக்கத்திலிருந்து மறுத்து வருகிறது.கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் குரலுக்கு இப்போது தமிழ் ஈழமக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது முதன்மையான வினாக்குறி! அவரைத் தமது பேச்சாளராக (Spokesperson) தலைவர் பிரபாகரன் தேர்வு செய்தாரா என்பது அடுத்த வினாக்குறி.ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் 2009 மே 18 லிருந்து பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்று உயிரோடிருக்கிறார் என்று கூறிவருகிறார்.2009 மே 18 அன்று தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சிங்கள அரசு படம் போட்டுக் காட்டி அறிவித்தது. அப்போது கொந்தளித்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் – நான் உட்பட – தமிழ்நாட்டில் முழுக்கடையடைப்பு நடத்த கருத்துகள் பரிமாறிக் கொண்டோம். அடுத்த நிமிடமே பிரபாகரன் உயிரோடு தப்பிச் சென்றுவிட்டார் என்று நெடுமாறன் ஐயா அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு காசி ஆனந்தன் மூலம்தான் எனக்குத் தெரிந்தது.மறு ஆண்டு 2010 நவம்பர் 27 அன்று தஞ்சை பெசன்ட் அரங்கு – சிற்றரங்கில் நடந்த மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய ஐயா நெடுமாறன், “அடுத்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வைத் தலைவர் பிரபாகரன் வெளிவந்து நடத்துவார்” என்று அறிவித்தார். அதன் பிறகு இன்றுவரை தலைவர் வரவில்லை.ஈழத்தமிழர் இனப்படுகொலையில் பல வடிவங்களில் பங்கெடுத்த இந்திய அரசுக்கு எதிராக கட்சி எல்லைகளைக் கடந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆவேசம் கொண்ட அந்த வேளையில், அந்த ஆவேசத்தை ஓரளவு தணிப்பதற்கே நெடுமாறன் அவர்களின் “தலைவர் உயிரோடு இருக்கிறார்” என்ற அறிவிப்பு பயன்பட்டது.இப்பொழுது நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இந்தியாவுக்கு எந்த அளவு அதிக விசுவாசத்துடன் பிரபாகரன் இருந்தார் என்று காட்டும் அக்கறையே மேலோங்கியுள்ளது.“விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை, இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்” என்று பழ. நெடுமாறன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். சீனா இலங்கையில் காலூன்றுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.ஆனால், தமிழீழ விடுதலைப் போர்க்காலத்திலும் அதன் பிறகும் இன்று வரை இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்குத் துணையாகவே செயல்பட்டு வருகிறது. காங்கிரசு ஆட்சியிலும் பாசக ஆட்சியிலும் இதுதான் உண்மை நிலை!“இலங்கை வழியாக சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க பிரதமர் மோடி துரித நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்றும் நெடுமாறன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.மேற்கண்ட அறிக்கை மற்றும் பழ. நெடுமாறன் அவர்களின் கூற்று ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, ஏற்கெனவே கவிஞர் காசி ஆனந்தன் குழுவினர், பாசகவை ஆதரித்து ஈழ மக்கள் உரிமைகளை மீட்கலாம் என்று கூறிய திட்டத்தை பழ. நெடுமாறன் அவர்கள் வலியுறுத்துகிறார் என்று தெரிகிறது. ஐ.நா. மனித உரிமை மன்றம்- சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க முன்வந்த போதெல்லாம் அதற்கு எதிராகச் செயல்பட்டது இந்திய அரசு என்பதே வரலாறு. காங்கிரஸ் ஆட்சியும், பாசக ஆட்சியும் இதில் ஒரே நிலைதான் எடுத்தது.தமிழ்நாட்டுத் தமிழர்கள் பாசக ஆரியத்துவா ஆட்சியை ஆதரித்து பாதாளப் படுகுழியில் விழக் கூடாது என்பதை நாம் எச்சரித்துக் கூறுகிறோம். கவிஞரும் ஐயா பழ. நெடுமாறனும் வெளியிட்டுள்ள அறிக்கை நம்பகத்தன்மை உடையதாக இல்லை.இது மூன்று வகையில் ஆபத்தானது.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்று வாழ்கிறார் என்பது அவர் மீது தமிழர்களும் பன்னாட்டு மக்களும் வைத்துள்ள பெருமதிப்பைச் சிதைப்பதாக உள்ளது.தமிழ்நாட்டில் இந்தி ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக வளர்ந்து வரும் தமிழின உணர்வை, தமிழ்த்தேசிய உணர்வை மடைமாற்றி, பாசகவின் பக்கவாத்தியமாக திசைமாற்றும் உத்தி இரண்டாவதாகத் தெரிகிறது.
மூன்றாவதாக பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உற்சாகத்தோடு தமிழ்நாட்டுத் தமிழர்கள் செயல்படும்போது, பயங்கரவாத அமைப்பை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆட்சியாளர்கள் அவர்களைச் சிறைப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இந்திய அமைதிப்படையின் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் ஆர். அரிகரன், “நெடுமாறன் அறிக்கை தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியர்களை உசுப்பிவிட்டு, பிரபாகரன் ஆதரவைப் பெருக்கிவிட வாய்ப்பளிக்கும்” என்கிறார். அதாவது இதன் மூலம் தமிழின உணர்வாளர்கள் மீது அரசு அடக்கு முறையை ஏவிவிடவும் வாய்ப்பிருக்கிறது என்று தெரிகிறது. இல்லாத விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு மீண்டும் மீண்டும் பிறப்பிக்க நெடுமாறன் அவர்கள் அறிக்கை வாய்ப்பளிக்கும்.இன்னொரு கெடுவாய்ப்பும் இருக்கிறது. தன்னாட்சி அதிகாரம் இல்லாத 13-வது சட்ட திருத்தத்தை இந்தியாவின் அழுத்தத்தோடு ஈழத் தமிழர்கள் மீது திணித்து தமிழர்களுக்குத் தன்னாட்சி கொடுத்துவிட்டதாக சிங்கள அரசு பசப்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது.தக்க சான்றுகள் இல்லாமல், தலைவர் பிரபாகரன் வரப்போகிறார் என்று நெடுமாறன் அவர்களும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் கூறுவதை அப்படியே ஏற்று ஏமாற வேண்டியதில்லை. தமிழ் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் இன உணர்வாளர்கள் – உரிமை மீட்பாளர்கள் தங்கள் சிந்தனையைச் சிதறவிடாமல் பணிகளைத் தொடர்வதே சரியாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]
- இன்று ஒளிமின் விளைவுகளை கண்டறிந்த இராபர்ட் மில்லிகன் பிறந்த தினம்ஒளிமின் விளைவு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்ட, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலறிஞர், இராபர்ட் மில்லிகன் […]
- “சண்டை காட்சிகளில் நடிப்பவர்களுக்குக் காப்பீடு வேண்டும்” – நடிகை சனம் ஷெட்டி கோரிக்கை!புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் […]
- விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ : இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் […]
- மதுரை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைதிருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 45 நிமிடங்களுக்கு மேலாக இடி, மின்னலுடன் […]
- வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்குவட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஏழு […]
- விவேகானந்தர் மண்டபம் படகு போக்குவரத்து கட்டண உயர்வை – சிபிஎம் கட்சியினர் மனுகன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு […]
- அக நக முக நகையே..’ வந்தியத்தேவன்-குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானதுலைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்–2’ திரைப்படம் வரும் […]
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை..,அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்..!சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு […]
- தமிழக ஆளுநரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு..!ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் கூறிவந்த […]
- குறள் 407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று. பொருள் (மு.வ): நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான […]
- அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் […]
- உச்ச நடிகையாக மாற்றம் கண்டுவரும் ஐஸ்வர்யா மேனன்தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். […]
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]